மன்னார் – இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 15 Second
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பக்கடவை ஏ-32 வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தினுள் இருந்து ஆணின் சடலம் ஒன்று இன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் இராசதுரை நாகேஸ்வரன் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை இறந்திருக்கலாம் என தெரிவிக்கபடுகிறது. எனினும் இறப்பிற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கபடவில்லை.
இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ரி.சிந்தாத்துரை சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதணைக்காக சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating