கணவரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை காட்டிற்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூர கும்பல்…!!
அஸ்ஸாமில் புதிதாக திருமணமான இளம்பெண் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அஸ்ஸாமில் பக்சா என்ற மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து அவர், கம்ருப் என்ற மாவட்டத்தில் உள்ள கெகேனிகுச்சி என்ற பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கணவருடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை அவர்களை வழி மறித்த 7 பேர் கொண்ட கும்பல், அவரது கணவரை திடீரென பலமாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணை கடத்தி சென்று அருகில் உள்ள காட்டிற்குள் வைத்து அந்த 7 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த தகவலை தற்போது பொலிசார் தெரிவித்துள்ளனர். தற்போது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவரில், அந்த பெண்ணின் உறவினரும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
தற்போது குவாஹாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Average Rating