நீதிபதிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார் பாக்., அதிபர் முஷாரப்
பாக்., சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆபாசமாக படம் பிடிக்கப்பட்டு, அதை காட்டி அவர்களை மிரட்டும் பணியில் அதிபர் முஷாரப் ஈடுபட்டிருக்கும் சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. பாக்., அதிபராக முஷாரப் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில், 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் முஷாரப்புக்கு சாதகமாக தீர்ப்பளிக்க நீதிபதிகளை, ராணுவத்தின் உளவுப் பிரிவு மிரட்டிய விஷயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. நீதிபதிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் ஆபாச படங்கள், ராணுவத்தின் உளவுப் பிரிவால் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டுள் ளன. இதன் பிரதிகள் குறைந்த பட்சம் மூன்று நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், நீதிபதிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு வீடியோ படத்தில், ஒரு நீதிபதி அவருடைய இளமையான மனைவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி. இன்னொன்று ஒரு நீதிபதியின் மகள், தனது காதலருடன் உறவில் ஈடுபட்டிருக்கும் காட்சி. இன்னொரு நீதிபதி, வேறு ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்திருந்த காட்சி. இது தெரியவந்ததும், அந்த பெண்ணின் வீட்டார் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதில் குழப்பமடைந்துள்ளனர். தங்களின் குடும்பத்தின் எதிர்காலமே சூனியமாகி விடும் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.முஷாரப்புக்கு சாதகமாக தீர்ப்பளிக்கா விட்டால், இந்த படங்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று நீதிபதிகள் மிரட்டப்பட்டுள்ளனர். நீதிபதிகளின் வீடுகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவது புதிதல்ல. இது பாக்.,கில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருவது தான். பாக்., உளவு அமைப்பு, சில பெண்களை நீதிபதிகளிடம் அனுப்பி, அவர்கள், “அனுபவிக்கப்படும்’ போது ரகசியமாக படம் எடுத்து வைத்துள்ளன. இது போன்ற ஏராளமான வீடியோ படங்கள் ஐ.எஸ்.ஐ., வசம் உள்ளது.