காதலை முறித்ததால் ஆவேசம்: காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (30).
திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட 7 வயது இளையவரான வெங்கடேஸ்வரலு (23) என்பவருடன் காதல் கொண்டார்.
இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்தனர். அப்போது வெங்கடேஸ்வரலுவிடம் கீதாஞ்சலி பணம் வாங்கினார்.
அந்த பணத்தை வெங்கடேஸ்வரலு திருப்பி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. எனவே பணத்தை திருப்பிக்கொடு என்று கேட்டார். அதற்கு கீதாஞ்சலி இரவு வீட்டுக்கு வா… பணம் தருகிறேன் என்றார்.
அதன்படி வெங்கடேஸ்வரலு வியாழக்கிழமை இரவு கீதாஞ்சலி வீட்டுக்கு சென்றார். அங்கு ஏற்பட்ட தகராறில் வெங்கடேஸ்வரலு மீது கீதாஞ்சலி ஆசிட் வீசினார்.
முகம் மற்றும் உடல் முழுவதும் வெந்த நிலையில் வெங்கடேஸ்வரலு குண்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
போலீசில் அவர் கூறும்போது, “கீதாஞ்சலி தன்னுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றார். நான் மறுத்ததால் என் மீது ஆசிட் வீசி விட்டாள்” என்றார்.
இது குறித்து தெனாலி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கீதாஞ்சலியை தேடி வருகிறார்கள்.
Average Rating