ஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று: அனுர – ஜனாதிபதி சந்திப்பு!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார். இதன்போது தினேஷ் குணவர்த்தன, டிலான் பெரேரா உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற...

ஐதேமு – சிவில் அமைப்புக்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் 75 சிவில் அமைப்புக்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட்ட 75...

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திர கட்சியில் இருந்து நீக்கம்!!!

நல்லாட்சிக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி,...

நாளை 10 மணித்தியால நீர்வெட்டு!!

நாளை கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணிவரை 10 மணித்தியாலங்கள் இவ்வாறு...

இபோச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தத் தடை!!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என, உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை...

வசிம் தாஜூடீன் கொலை: பூரண மரண விசாரணை அறிக்கை சமர்பிக்க உத்தரவு!!

இலங்கையின் பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் மரணம் தொடர்பில் பூரண மரண விசாரணை அறிக்கை சமர்பிக்குமாறு கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாஜூடீன் மரணம்...

மஹிந்தவின் புதிய தேர்தல் வாக்குறுதி!!

ஆறு மாத காலத்தினுள் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அறிமுகம் செய்வதோடு தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றியமைத்து புதிய தேர்தல் முறை ஒன்றையும் அறிமுகம் செய்து வைப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட...

போதைப்பொருளை ஒழித்துக்கட்ட ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு!!

முழு தென்னாசியப் பிராந்தியதிற்கும் ஒரு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம...

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவருக்கு மீண்டும் விளக்கமறியலில்!!

பாரத ரக்ஷமன் பிரேமசந்திர கொலை வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த மூன்றாவது முக்கிய சந்தேகநபர் சமிந்த ரவி...

ஓற்றை ஆட்சிக்குள் இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து கொண்டு, அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

சுசிலுக்கு எதிராக FCID செல்கிறார் கெமுனு!!

முன்னாள் கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக பொலிஸ் விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு செல்லவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். சுசில் பிரேமஜயந்த அமைச்சராக...

தாஜூடீனின் மரணம் விபத்தல்ல கொலை – நீதிமன்றத்தில் தெரிவிப்பு!!

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது அல்ல, கொலை என இரகசிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில்...

அப்துல் கலாம் காலமானார்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் தனது 83வது வயதில் இன்று காலமானார். மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில், கலாம்...

மலேசியா செல்ல முயன்ற விடுதலைப் புலி உறுப்பினர் திருச்சியில் கைது!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்குத் தப்ப முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர்...

10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு முடிவு!!

பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு முடிந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் செயலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக...

விபத்து: 16 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் வண்டி ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: ரணில் வாக்குறுதி!!

இலங்கையில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால், மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களிளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மலையகத்தின் தலைநகரான நுவரேலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார...

யாழ். முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்!!

வட இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியான நிலையில் இருப்பதனால், அதனை முழுமைப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில்...

போதைப்பொருளை ஒழித்துக்கட்ட ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு!!

முழு தென்னாசியப் பிராந்தியதிற்கும் ஒரு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம...

நாமக்கல் அருகே கிணற்றில் கார் பாய்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. மகள்–பேத்தி பலி!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவர் சேலம் இரும்பாலையில் சீனியர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பூங்குழலி (48). இவர்களது மகள்கள் மங்கையர்கரசி (27), அங்கையர்கன்னி (25)....

பஸ் டிரைவர் கொலை: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் காதலன் மூலம் தீர்த்துக்கட்டினேன்- மனைவி வாக்குமூலம்!!

திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 32). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி விமலா (28). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த...

கர்நாடகாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் சிந்தனூர் நகரில் உள்ள சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணிபுரிந்தவர் சரணப்பா சஜ்ஜன். மூத்த நீதிபதியான இவர் முன் ஒரு கல்வி நிறுவன வழக்கு விசாரணைக்கு வந்தது. அல்சூரைச் சேர்ந்த...

பிடித்தமான பாட்டை போடாததால் மணமகனின் தந்தை சுட்டுக் கொலை: சோகத்தில் முடிந்த திருமண விழா!!

உத்தரகாண்ட் மாநிலம், ஹரிதுவார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது தங்களுக்கு பிடித்தமான பாலிவுட் பாடல்களை போடாததால் ஆத்திரம் அடைந்த குடிமகன்கள், மணமகனின் தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள...

உத்தரபிரதேசத்தில் தலைமை காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது!!

உத்தர பிரதேசத்தில் தலைமை காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்காக துணை ஆய்வாளரும் தலைமைக் காவலரும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

மொரவக - கோடிகாரகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கருத்து முரண்பாடே மோதலுக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் 77 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன்...

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொலை!!

தங்காலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த உக்குவா என்பவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன்போது மேலும் இருவர்...

பாகிஸ்தானைப் பந்தாடிய இலங்கை – 369 இலக்கு!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது....

மஹிந்தவுக்கு அவமதிப்பு – மங்கள, அனுர உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நடவடிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நேற்றையதினம் இது தொடர்பில்...

165 ஓட்டங்களால் இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான்!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 165 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக...

ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ஜாவா தீவில் இருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...

பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்!!

பிரபல கார்ட்டூன் கலைஞர் தயா ராஜபக்ஷ தனது 78வது வயதில், காலமாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (26) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து இவர் உயிர்பிரிந்துள்ளது. இவரது காட்டூன் கதைகள் சில தொலைக்காட்சித்...

வாக்குறுதிகளை மட்டுமே வழங்கவில்லை!!

தமது அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்குவதை மட்டுமே செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு...

மலையகத்தில் தேர்தல் சுவரொட்டிகளால் சர்ச்சை!!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கியுள்ள எஸ்.சதாசிவம் காட்சிப்படுத்தியுள்ள சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சதாசிவத்தால் காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், பொதுச்...

அதுருகிரியவில் கொள்ளை!!

அதுருகிரிய - 10ம் கட்டைப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முகத்தை மூடிய படி வந்த நால்வர் இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்து கற்கள், காலி பாட்டில்கள், விறகு கட்டைகளால் தாக்கியதோடு மட்டுமின்றி, துப்பாக்கிகளால் சுட்டு விரட்டியடித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள்...

இளைஞர்களுக்கு 50,000 ரூபா, வௌிநாடு செல்லக் கடன் – மஹிந்த!!

தான் அதிகாரத்திற்கு வந்தால் 18 வயது முதல் 30 வயது வரையான இளைஞர்களுக்கு 50,000 ரூபா மற்றும் வௌிநாடு செல்ல கடன் தொகை என்பன பெற்றுக் கொடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

மட்டில் வெற்றுக் காணியில் கிடந்த ஆணின் சடலம்!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கீச்சான்பள்ளம் கிராமத்தில் வெற்றுக் காணியொன்றுக்குள் கிடந்த ஆணின் சடலமொன்று இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை...