Archive for the வாசகர் ஆக்கம் Category

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதிசெய்பவர்கள் யார்?? (பாகம் -2)

‘நாடு கடந்த தமிழீழ அரசின் திட்டங்களை முறியடிப்பதற்கு எங்களின் தூதர்களுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன’- இது அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தவினால் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கூறப்பட்ட கருத்துக்கள். மகிந்தவின் அந்தக் கருத்துக்களில் தூதர்கள் என்று குறிப்பிடுவது நான் முன்னர் குறிப்பிட்ட நோர்வேக்குழுதான் போலும். சிங்களம் ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்த நினைக்கின்றது. நாடு கடந்த தமிழீழ அரசைச் செயலிழக்கச் செய்வது மற்றும் புலத் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பது போன்றவற்றை இந்த நோர்வேக்குழு மூலம் நிறைவேற்ற [...]

No Comments

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)

உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றிப் பயணத்துக்கு சிறிலங்கா அரசு தான் தடைக்கல்லாக அமையும் என்று எங்களில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைத்தவற்றுக்கு மாறாக உள்ளிருந்தே ஒற்றுமையை உடைப்பதற்கு அங்கே குழுக்கள் உருவாக்கம் பெற்றுவிட்டன. அன்று விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் – கடந்த வருடம் கே.பியை காட்டிக் கொடுத்தவர்கள்- கடந்த மாதம் தாயகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தவர்கள் – இன்று நாடு கடந்த தமிழீழ அரசை செயலிழக்கச் செய்வதற்காக அல்லது [...]

No Comments

சுவிஸ் நாட்டில் ‘அறோ” என்ற மாநிலத்தில் நடந்த கல்யாண வீட்டு நிகழ்ச்சியொன்றில், நம்மவர்களால் நடாத்தப்பட்ட புதுமையான வீரசாகச விளையாட்டு!!

நம்மட நாட்டில சண்டை இப்பொழுது ஓய்ந்து விட்டது. ஆனால் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே நடக்கின்ற சண்டைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குடும்ப சண்டையிலிருந்து, பிரதேசம், குழு, ஊர், வட்டாரம், சாதி, என ஒருவருக்கொருவர் பகைமை காட்டி, பழைய கோபதாபங்கள், நானா, நீயா பெரியவர், சின்னவர் என பழைய பஞ்சாங்க கதைகள் பேசி, கங்கணம் கட்டிக் கொண்டு புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கும் போது வெட்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த [...]

6 Comments

கருணா அம்மானே!! எங்கள் கருணா அம்மானே!! நீ கருணையுள்ளம் கொண்டவனாமே..?

கருணா அம்மானே!! எங்கள் கருணா அம்மானே!! நீ கருணையுள்ளம் கொண்டவனாமே..?

கஸ்ரப்படாமல் நீ வாழ்வதற்காய்..
‘கனம்” தங்கிய (அமைச்சர்) பதவியை
நீ பெறுவதற்குமாய், கறுத்த கோட்டும்
கறுத்த சூட்டும் நீ அணிவதற்காய்
‘கனம்”; சுமக்காமல் நீ காசு பிழைப்பதற்குமாய்..
கடன்பட்டு கடல் கடந்து சென்று
கனகாலமாய் கானகத்து வெய்யிலிலும்,
கடும் குளிரிலும் கஸ்ரபட்டு காசுழைத்து
தன் கஸ்ரங்கள் எல்லாம் தீர்ந்ததென்றெண்னி
கனவுகள் பல சுமந்து கொண்டு
கட்டுநாயக்கா விமானத்தளத்தில்
கால் பதித்து வந்தவர்களை
கள்ளத்தனமாய் ‘காவலாளி” களுடன் கூட்டுசேர்ந்து
கடத்திக் கொண்டு போய் கப்பம் வாங்கி
கருணையில்லாமல் கழுத்தறுத்து
கொலை செய்த கருணா அம்மானே!!
நீ கருணையுள்ளம் கொண்டவனாமே..!!
கண்ணிரண்டுமிருந்தும் புண்ணுடையார்;
கவிதை வடிக்கிறார்;கள் உன் மீது கருணை கொண்டு..
கருணா அம்மானே!! எங்கள் கருணா [...]

8 Comments

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.2009.இல் தீக்குளித்து இறந்த தமிழ் இளைஞரின் மரணமானது புலிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும்!!

வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரை நிறுத்துவதற்காக புலி இயக்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டது தான் இந்த தீக்குளிப்பு போராட்டமாகும். இந்த தீக்குளிப்பு போராட்டமானது கிட்டதட்ட வன்னியில் உள்ள அப்பாவி இளஞர்களை மூளைச்சலவை செய்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு சமமானதாகும். ஈழத்தமிழருக்காக தமிழ் நாட்டில் எதேட்சையாக தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பு முத்துக்குமார் எனும் இளைஞர் 29.01.2009இல் தீக்குளித்து தற்கொலை செய்துண்டார். இந்த தற்கொலை சம்பவமானது உலக தமிழர்கள் [...]

23 Comments

சுவிஸ் சூரிச் மாநகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் ஊரின் பெயரை பிரயோகிப்பது முறையா??

சுவிஸ் சூரிச் மாநகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் ஊரின் பெயரை பிரயோகிப்பது முறையா??

கடந்த 28.09.08 ஞாயிறு இரவு சுவிஸ் சூரிச் மாநகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிட்ட தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் ‘வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் ஒருபகுதியினர் உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒருசிலரெனக்” குறிப்பிடப் பட்டிருந்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடுப்பிட்டி என்பது பல்வேறு தரப்பட்ட மக்களைக் கொண்ட ஓர் பரந்த பிரதேசமாகும். இங்கு கல்வி பயின்று பலரும் பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாகவும் பண்பாளராகவும் பலநாடுகளிலும் சிறந்து விளங்குவதை உலகமே அறியும். உடுப்பிட்டி இமயனன் எனும் [...]

2 Comments

ஈஎன்டிஎல்எப் இன் தலைமையான பரந்தன் ராஐனும் அவரின் வழிநடத்தல்களில் தோன்றிய வெளிநாட்டுக் கொள்ளைகளும்..

ஈஎன்டிஎல்எப் இன் தலைமையான பரந்தன் ராஐனும் அவரின் வழிநடத்தல்களில் தோன்றிய வெளிநாட்டுக் கொள்ளைகளும்..

யார் இந்த பரந்தன் ராஐன்?.. உழைப்பிற்காக பரந்தனில் குடியேறிய ராஐன் ஆரம்ப காலத்தில் காட்டில் கள்ள மரங்களை விற்பதும் இவரது தொழிலாகும். இதற்காக பலரை தன்னுடன் இணைத்து ஒரு கூட்டாகச் செயற்பட்டார். அதுமட்டும் அன்றி இவர் ஒரு சிறந்த சாரதியாகவும் விளங்கினார். இவரிற்கு வன்னிக்காடுகள், கள்ளப் பாதைகள் அனைத்தும் பரிட்சையமானது. அக்கால கட்டத்தில் இவருடன் இருந்த இந்தக் கள்ளக் கூட்டம் வழிப்பறியிலும், தெருச்சண்டித் தனத்திலும் வளர்ச்சி அடைந்தார்கள். பின்னர் இவரின் இந்த வளர்ச்சி அக்கால கட்டத்தில் [...]

9 Comments

விரைவில் வெளிவரவுள்ள “பிரபாகரன்” எனும் படத்தின் சில காட்சிகள்… (Pirabaharan Film VIEW..)

இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் துஷாரா பெரீஸ் “பிரபாகரன்” என்ற பெயரில் தமிழ் மற்றும் சிங்களத்தில் ஒரு படம் எடுத்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள “பிரபாகரன்” எனும் படத்தின் சில காட்சிகள்… (Pirabaharan Film VIEW..)http://www.youtube.com/watch?v=flT_MW8u6NI (இங்கே அழுத்தவும்)
THANKYOU FOR… WWW.ATHIRADY.COM

Comments Off

காலம் கடந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினருக்கு பிறந்த ஞானம்!! – ஜேர்மனியில் “புளொட்” வெளிநாட்டுக் கிளைகளின் ஓன்று கூடல்…

காலம் கடந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினருக்கு பிறந்த ஞானம்!! - ஜேர்மனியில்

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதன்மை அமைப்பாக தோழர் உமாமகேஸ்வரன் அவர்களால் வழிநடாத்தப்பட்ட புளொட் அமைப்பானது புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஏகப்பிரதிநிதித்துவ மோகத்தால் பல நயவஞ்சகங்களுக்கு உட்படுத்தப்பட்டு அவ்வமைப்பின் போராடும் உரிமை மறுக்கப்பட்டு தொடர்ச்சியாக அதன் மீது ஆயுத வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப் பட்டிருக்கின்ற போதிலும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இறுதி போராளி மரணத்தை தழுவும் வரை அவ்வமைப்பு இலங்கைத் தீவில் நின்று நிலைத்து எம்மக்களின் விடிவிற்காய் போராடும் எனும் [...]

Comments Off

வாழி! வாழி!! கொடுங்கோலாய் வாழி!!!

வாழி! வாழி!! கொடுங்கோலாய் வாழி!!!

கொலை வெறியின் குரு – நீ
பாசிசத்தின் பாடுபொருள் — நீ
அராஐகத்தின் அவதாரம் — நீ
அட்டூழியத்தின் அதிபதி – நீ
அடக்குமறையின் அரசன் — நீ
ஆணவத்தின் அரங்கம் — நீ
பொய்மையின் பிறப்பிடம் — நீ
நயவஞ்சகத்தின் நாயகனே – நீ…
தலையாட்ட நம் தேசம் உள்ளவரை
தேசியத்தின் தலைவனும் – நீ
வாழி! வாழி!! வாழியவே!!!
—திருமதி.நிர்மலா.

Comments Off

ஈ.என்.டி.எல்.எப்பும், நிதர்சனமும் சேர்ந்து நடாத்தும் பிரச்சார விபச்சாரம்!!

ஈ.என்.டி.எல்.எப்பும், நிதர்சனமும் சேர்ந்து நடாத்தும் பிரச்சார விபச்சாரம்!!

****************************
புலிகளின் குப்பை இணையத்தளமான நிதர்சனத்துடன் ஈ.என்.டி.எல்.எப் சோரம் போனதுடன் கருணாவிற்கு எதிராக பிரச்சாரத்தை உடனுக்குடன் போட்டி போட்டு வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. ஈ.என்.டி.எல்.எப்பின் சர்வதேசப் பொறுப்பாளர் ராம்ராஜ் மகளிர் அணித்தலைவி ஜென்னி ஊத்தை சேதுவுடன் சோடி சேர்ந்து கூத்தடிக்கின்றனர். நிதாசனமும் தீப்பொறி இணையத்தளமும் கருணாவிடயத்தில் தமக்குள் கள்ள உறவை ஏற்படுத்தி ஊடகவிபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னர் ஈ.என்.டி.எல்.எப்பை தாக்கி எழுதிய நிதர்சனம் அவ்வமைப்பால் வெளியிடப்படும் தீப்பொறியின் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து வருகின்றது. தீப்பொறி இணையத்தின் கேவலமான இந்தப்பிரச்சாரத்தினால் [...]

Comments Off