நோர்வே புலிகளைத் தடைசெய்யவேண்டும் – பாதிக்கப்பட்ட நோர்வே தமிழர்

நோர்வேயில் செயற்படும் தமிழர் ஜனநாயக அமைப்பின் தலைவரான திரு சிவராஜா ராஜசிங்கம் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகள் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என...

ஐக்கிய தேசியக்கட்சியின் குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி விளக்கம்

இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் ஏற்பாட்டாளராக நோர்வே செயற்படும்வரை ஜே.வி.பி எந்தவொரு விடயத்தையும் நோர்வேயுடன் பகிர்ந்துகொள்ளாது. இந்நிலையில் நோர்வேயூடாக ஜே.வி.பி புலிகளுக்கு இரகசிய செய்தியொன்றை அனுப்பியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்துவதில் எந்தவொரு...

காத்தான்குடியில் புலிகளின் கிளைமோர்த் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிசார் பலி

மட்டக்களப்பு காத்தான்குடிப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரைப் பார்வையிடச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று புலிகளின் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. (more…)

இராணுவத்தாலும் ஈ.பி.டி.பியாலும் அச்சுறுத்தலென கஜேந்திரன் பாராளுமன்றத்தில் முறைப்பாடு

இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் யாழ்ப்பாணத்திலுள்ள தமது காரியாலயமும், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை காரியாலயமும் தீவைக்கப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எஸ்.கஜேந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)

வவுனியாவில் இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துவக்கு முனையில் கடத்தப்பட்டனர்.

வவுனியா மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். (more…)

கொழும்பு மாநகரசபையின் மூக்குக்கண்ணாடி குழு தலைவர் ராஜேந்திரன் பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கும் செய்தி

மூக்குக்கண்ணாடி சின்னத்தில் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள எமது சயேற்சைக்குழு அடுத்தமாத முற்பகுதியில் மாநகரசபை அங்கத்தவர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் இராமநாதன் கணேசனை மேயராகவும் சேபால வசந்தவை பிரதிமேயராகவும் தேர்தல் ஆணையாளர்களக்கு சிபாரிசு செய்து...

மட்டக்களப்பில் இரண்டு புலி உறுப்பினர்கள் படையினரால் சுட்டுக்கொலை

மட்டக்களப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் செங்கலடி குமாரவேலியார் பகுதியில் இடம் பெற்றுள்ளது. (more…)

தமிழகத்திற்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையிலிருந்து நேற்று 234அகதிகள் தமிழகம் சென்றடைந்துள்ளனர். ஒரேநாளில் பெருமளவான அகதிகள் தமிழகத்தை சென்றடைந்தமை இதுவே முதற்தடவை என்று தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் பகுதிக்கு அண்மையில் உள்ள அரிச்சல்முனை, சரன்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே படகுகளில் சென்ற அகதிகள்...

ஈராக்கில் பதவியேற்றுள்ள புதிய ஜனநாயக அரசுக்கு துணை நிற்போம் அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் உறுதி

ஈராக் நாட்டின் பிரதமராக நூரி அல் ரூ மாலிக்கி என்பவர் நேற்று பதவியேற்றார். போருக்கு பின் பதவியேற்கும் முழுநேர பிரதமர் மாலிக்கி என்பது குறிப்பிடத்தக்கது. நாட்ட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத்...

மட்டக்களப்பில் இந்தியர் கடத்தப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 23-05-2006 அதன்று அதிகாலை இந்திய வியாபாரியான ராதாகிருஷ்ணன்(48) என்பவரை புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. (more…)

புலிகளின் பிரதேசத்துக்கு மேலாக சிறிலங்கா உளவு விமானம்??

அம்பாறையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு மேலாக சிறிலங்கா விமானப்படையின் உளவு விமானம் பறந்து வேவு பார்த்துச் சென்றுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

தமிழர் கொழும்பு மாநகர முதல்வராகிறார்

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பு சுயேட்சைக்குழு கைப்பற்றியது தெரிந்ததே. (more…)

கண்ணிவெடி விபத்தில்….

கண்ணிவெடி விபத்தில் ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர் படுகாயம் யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கில் கண்ணி வெடி அகற்றும் பணியை செய்துவந்த ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் சுளிபுரத்தை சேர்ந்த...

புலிகளின் பதிலில் உத்தரவாதமாக கருத முடியாது – கண்காணிப்புக்குழு

கடல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசாங்கத்திடமும், புலிகளிடமும் உத்தரவாதம் கோரியிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுக்கு புலிகள் கடிதம் அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளனர். (more…)

கிளைமோர் தாக்குதலில் மூவர் பலி மூவர் படுகாயம்

வவுனியா ஈச்சங்குளம் வீதியிலுள்ள மரைக்காறம்பளை பகுதியில் இன்றுகாலை 9.30மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு படையினரும், ஒரு பொலீசாரும் பலியாகியுள்ளதுடன், இரு படைவீரர்களும், ஒரு பொலீசாரும் காயமடைந்துள்ளனர். (more…)

எனது வருகையால் முன்னேற்றம் ஏற்படாது: எரிக் சொல்ஹெய்ம்

இலங்கைக்கான தனது வருகையால் தற்போதைய நிலைமைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படக் கூடிய சாத்தியமில்லை என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதித் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு கிழக்கு மக்களை பிரபாகரன் கும்பலின் கொடூரப்பிடியிலிருந்து மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் -‘ரிஎம்விபி”யின் இராணுவத்தளபதி மார்க்கன்

வன்னிப்புலிகளிடமிருந்த போது ஆண்டான்குள (வாகரை) பிரதேச இராணுவப் பொறுப்பாளராக இருந்து தற்போது கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) இராணுவத்தளபதியாக இருக்கும் மார்க்கன் எனும் ஐ..மார்க்கன் அவர்கள் முதன்முறையாக ஊடகத்திற்கு அதிலும் நிதர்சனம்.நெற் இணைத்தளத்திற்காக...

ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ்செல்வன்

புலிகளை தடைசெய்வது தொடர்பான ஐரோப்பிய யூனியனின் போக்குகள், அமைதி நடவடிக்கைகளை மோசமான நிலைக்கே தள்ளுவதாக அமையுமென புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். (more…)

புலிகள் மீதான தடையை ,ந்தியா நீடிப்பு

விடுதலைப் புலிகள் ,யக்கத்தின் மீது விதித்திருக்கும் தடையை ,ந்தியா மேலும் நீடித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பு ,ந்தியாவில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ,யக்கமாக ,ருக்குமென்று கடந்த 14ஆம் திகதி ,ந்திய மத்திய அரசு அறிவித்ததையடுத்து கடந்த 14ஆம்...

ஓமந்தை இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவலரணில் காவற் கடமையிலிருந்த சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். (more…)

ரமணனுக்கு கேணல் நிலையளித்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு

மட்டு.வவுணதீவுப் பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முள்ளாமுனைப் பகுதிக்கு அண்மையில் கருணாஅம்மானின் 'ரிஎம்விபி"யின் விசேட படையணியினர் பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத்தளபதியும் புலிகளின் கிழக்குமாகாண...

20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள

20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐந்து உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியது. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி நான்கு உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது. (more…)

காணாமற்போன பெண் சடலமாக மீட்பு.

காணாமற் போயிருந்த குடும்பப் பெண்ணொருவர் சடலமாகக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு இராமநாதன் வீதியில் கடந்த 19ம் திகதி இரவு 9.30 மணிக்கு அயல்வீட்டில் படம்பார்த்துவிட்டு திரும்பும்போது காணாமற்போன யோகநாதன் பிரேமநந்தினி (32) என்பவரே...

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: இராணுவப் பேச்சாளர்

அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: இராணுவப் பேச்சாளர் தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புடனே உள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளர்....

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார். (more…)

புளொட் மத்தியகுழு உறுப்பினர் பாருக் கடத்தலில் மாட்டிக்கொண்டு பூசிமெழுகும் புலிகள்

கடந்த வருடம் 12.12.2005 அன்று புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாருக்) வவுனியாவிலிருந்து புலிகளால் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்கள் புளொட் அமைப்பினரின் உதவியுடன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது....

புளொட் மத்தியகுழு உறுப்பினர் கடத்தல் தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை-

கடந்த 12.12.2005 அன்று முற்பகல் 11மணியளவில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரான சின்னத்தம்பி கணேசலிங்கம் என்கிற பாரூக் அவர்கள் வவுனியா முருகனு}ர் பகுதியில் உள்ள மாணிக்கபுரத்தில் வைத்து புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள்...

வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத் தளபதியும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண பதில்தலைவருமான ரமணன் கருணாஅம்மானின் ரிஎம்விபியின் விசேட ஊடுருவித் தாக்கும் படையணியின் தாக்குதலில் பலி…..

இன்றுமாலை 6.30மணிக்கு மட்டு.வவுணதீவுப் பிரதேசத்தில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முள்ளாமுனைப் பகுதிக்கு அண்மையில் கருணாஅம்மானின் 'ரிஎம்விபி"யின் விசேட படையணியினர் பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத்...

திருமலை கிளைமோர்த் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் பலி

திருகோணமலை மாவட்டம் சேருநுவர லிங்கபுரம் 3 ஆம் வாய்க்கால் இடது கரையில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

இந்தியாவுக்கு சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி 5 பேரைக் காணவில்லை.

யுத்த பீதியில் தஞ்சம் கோரி இந்தியாவுக்கு சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தும் ஐவர் காணாமல் போய்யுள்ளனர். இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பி,...

நேற்று நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னிலையில் உள்ளது

312 உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 145517 வாக்குகளைப் பெற்றதால் 128 உறுப்பினர்களை பெற்று முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி 95313 வாக்குகளைப் பெற்று 67...

பாசிச பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். ஜனநாயம் புத்துயிர் பெறவேண்டும்.

ராஜிவ் காந்தி நினைவு நாள் இன்று இந்தியாவின் இளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தினம். ;ராஜிவ் காந்தி அவர்கள் இலங்கைத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நியாயபூர்வமான தீர்வை உருவாக்குவதில்...

வவுனியாவில் மிதிவெடியில் சிக்கி இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலி

வவுனியா இரணை இருப்பைக்குளத்தில் மிதிவெடியில் சிக்கி சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இராணுவத்தினரின் சுற்றுக்காவல் அடிணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடியில் சிக்கியதில் இச்சம்பவம் நடந்துள்ளது....

கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியது ஐ.தே.க. ஆதரவு குழு

சிறிலங்கா தலைநகர் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு சுயேட்சைக் குழுவான இலக்கம் 03 ஜக் கொண்ட சுயேட்சைக் குழு வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வேட்பு...

தங்களின் மழலைச் செல்வங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு புளொட்பாரூக் சாந்தா தம்பதிகள் வன்னிக்கு உல்லாசப்பயணம் என்கிறார்கள் வன்னிப்புலிகள்!!! இது எப்படியிருக்கு??

கடந்த 12.12.2005ல் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் சமூகசேவகருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாரூக்) அவர்களையும் புளொட்பாரூக் புலிகளால் கடத்தப்பட்டு வன்னி கொண்டு செல்லப்பட்டதை அறிந்து பாரூக் அவர்களைப் பார்வையிடச் சென்ற...

பாரூக்கை மீட்க புளொட் சர்வதேச அழுத்தம் ஊடாக நடவடிக்கை எடுக்குமா?

கடந்த (16.05.2006) புலிகளின் நிதர்சனம் இணையதளத்தில் 12.12.2005ல் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் சமூகசேவகருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாரூக்) என்பவர் சுயவிருப்பத்தில் புளொட் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வன்னி...

விடுதலைப் புலிகள் இனி சுயாதீனமாக செயற்படுவார்கள்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

சர்வதேச சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது சுயாதீனமாக செயற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் குறித்து அவர்...

பொலீசாரை விடுவிக்கும் நோக்கமில்லை

பொலீசாரை விடுவிக்கும் நோக்கமில்லை- புலிகளினால் வன்னியில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பொலீஸ் உத்தியோகத்தர் போபிட்டிகொடவை விடுதலை செய்யும் உத்தேசம் ஏதும் இல்லையென புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார். (more…)