புலிகள், ராணுவம் சண்டை நிறுத்தத்துக்கு தயார்

பயங்கர சண்டையால் மூதூரில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறி தவித்து வரும் பொது மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வசதியாக மனிதாபிமான அடிப்படையில் தங்களது தாக்குதலை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தாக்குதலை புலிகள் நிறுத்தினால் தாங்களும்...

டெஸ்ட் போட்டியில் 650 விக்கெட் கைப்பற்றி முரளீதரன் சாதனை

உலகின் தலை பிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முரளீதரன். இலங்கையை சேர்ந்த அவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதி ராக நேற்று தொடங்கிய 2- வது டெஸ்டில் முரளீதரனின் பந்து...

மூதூர் நகரில் சண்டை நீடிக்கிறது இதுவரை 161 பேர் பலி

இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது. இதில் இதுவரை 161 பேர் இறந்து இருக்கிறார்கள். மூதூர் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகிறார்கள். (more…)

வன்னிப்புலிகளின் முகாம் கருணாஅம்மான் தரப்பினரால் தாக்கியழிப்பு! 11பேர் பலி! மூவர் கைது!!

நேற்று அதிகாலை 4:30 மணியளவில் மட்டக்களப்பு, வாழைச்சேனை, பனிச்சங்கேணிப் பகுதியிலுள்ள வன்னிப்புலிகளின் முகாம் ஒன்று கருணாஅம்மானின் இராணுவதரப்பினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 11வன்னிப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் உயிருடன் பிடிக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

பட்டுச்சேலை நெசவில் ஆர்எம்.கே.வி.யின் புதிய சாதனை…

ஒரே பட்டுச்சேலையின் இருபக்கங்களிலும் வேறுவேறு நிறங்கள், 4 பார்டர்கள் மற்றும் 4 முந்தானைகளுடன் நெசவு செய்து தமிழ்நாடு ஆர்எம்.கே.வி. நிறுவனம் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரேசேலையை 4 வேறு வேறு சேலையைப்போல 2 நிறங்களில்...

ரம்ஸ்பெல்டு பதவி விலக ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை

ஈராக் கொள்கையில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராணுவ மந்திரி ரம்ஸ்பெல்டு பதவி விலக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் மனைவியும், நிïயார்க் செனட்டருமான ஹிலாரி கோரி இருக்கிறார். (more…)

மூதூர் மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்கின்றனர்

இலங்கையின் கிழக்கே மூதூர் பகுதியில் மோதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்புத் தேடி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி கந்தளாய் கிண்ணியா மற்றும் திருகோணமலை நகர் ஆகிய இடங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன....

பொது இடங்களில்் புகைப்படம் ‘கிளிக்’-சௌதி அரசு அனுமதி

சௌதி அரேபியாவில் பொது இடங்களில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. இஸ்லாம் மதம் உதித்த மண்ணான சௌதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மற்ற¬முஸ்லீம் நாடுகளைப் போல அல்லாமல், தீவிர...

காஸ்ட்ரோ உயிரோடு இருக்கிறாரா? அமெரிக்காவில் பரவிவரும் வதந்தி

கிïபா நாட்டின் கம்ïனிஸ்டு அதிபரான பீடல் காஸ்ட்ரோ கடந்த மாதம் (ஜுலை) 26-ந்தேதிக்கு பிறகு காஸ்ட்ரோ பொதுமக்கள் யார் பார்வையில் தட்டுப்படாததாலும், ராணுவம் போலீஸ் திரட்டப்படுவதாலும் அவர் இறந்து போயிருக்கலாம் என்ற வதந்தி அமெரிக்காவில்...

உக்ரைன் நாட்டின் அதிபர் தன் அரசியல் எதிரிக்கு பிரதமர் பதவி அளிக்க திட்டம்

ரஷியாவில் இருந்து பிரிந்த உக்ரைன் நாட்டின் அதிபராக இருப்பவர் விக்டர் யுஷ்சென்கோ. இவரது அரசியல் எதிரி விக்டர் யானுகோவிச். கடந்த 2004-ம்ஆண்டு நடந்த தேர்தலில் யானுகோவிச்சை அவர் தோற்கடித்தார். கடந்த சிலமாதங்களாக நடந்து வந்த...

இஸ்ரேல் குண்டு வீச்சு: லெபனானின் பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது

இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் ஏவுகனைகளை வீசி பதிலடி...

முஷாரப் ஒரு விஷம் -நவாஷ்ஷெரீப்

முஷாரப் ஒரு விஷம், பாகிஸ்தானையே அவர் அழித்துவிடுவார் என்று மாஜி பிரதமர் நவாஸ்ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவராக மாஜி பிரதமர் நவாஸ்ஷெரீப் சகோதரர் ஷபாஷ்ஷெரீப்...

ராணுவம்-விடுதலைப்புலிகள் மோதல் நீடிப்பு- மேலும் 21 பேர் பலி

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் மேலும் 21 பேர் பலியாகி உள்ளனர். இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக...

இஸ்ரேல் மீது 230 ராக்கெட்டுகள் வீசித்தாக்குதல் ஹிஸ்புல்லா பதிலடி

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அந்த நாட்டினர் மீது 230 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு இஸ்ரேலியர் பலியானார். லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டைச்...

பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு: இந்திய நடிகர்களின் படங்களுக்கு தடை

இந்திய அல்லது பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்த படங்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான பாகிஸ்தான் அரசின் புதிய இறக்குமதி கொள்கை வெளியிடப்பட்டது. அதில்...

கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிராக…

நோயுற்று, சிகிச்சை பெற்றுவரும் கியூபா நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு கியூபா மக்களுக்கு, அந்நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்துவரும் கியூபா நாட்டவரின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. குடலில் ஏற்பட்டுள்ள...

லெபனானின் கானா உயிரிழப்பு 28 மட்டுமே

லெபனானின் கானா கிராமம் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 28 பேர் மட்டுமே உயிரிழந்ததாக மருத்துவமனையின் திருத்தப்பட்ட தகவல் கூறுகிறது. தெற்கு லெபனானில் டையர் நகருக்கு அருகேயுள்ள கானா கிராமத்தின் மீது கடந்த...

மூதூரில் நடப்பதென்ன…..

இராணுவம் முகாமிற்குள் இருக்கிறார்கள் வெளியே வரவில்லை. கூடுதலாக எல்.ரி.ரி.ஈ அடிக்கிற செல் மக்கள் இருக்கிற இடங்களில் வந்து விழுந்து கன சேதம் ஏற்பட்டுள்ளது. எல்ரிரிஈ ஒரு பகுதியிலும் கடற்படை ஒருபகுதியிலும் நிற்கிறார்கள். மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்....

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் – ஆனந்தசங்கரி

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து தண்ணீரை திறந்து விட்டு ஏழை விவசாயிகளை ஆபத்திலிருந்து பாதுகாக்க தமிழ் சமூகம் ஏல்.ரி.ரி.ஈ யிடம் கோரவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேட்டுக்கொண்டுள்ளார். 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில்...

பூரண நலத்துடன் இருக்கிறேன் -காஸ்ட்ரோ அறிவிப்பு

ஆபரேஷனுக்கு பிறகு நான் பூரண நலத்துடன் இருக்கிறேன் என்று கிïபா அதிபர் பீடல் காஸ்ட்ரோ அறிவித்தார். 47 ஆண்டுகளாக அதிபராக இருந்த காஸ்ட்ரோ ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தன் தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்....

லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 7 பேர் பரிதாப பலி

லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித்தாக்குதல் மற்றும் வான்வெளி தாக்குதல் ஆகியவற்றை மிகக் கொடூரமான முறையில் தொடுத்தது. இஸ்ரேலிய கமாண்டோ படை வீரர்கள் ஹிஸ்புலா தீவிரவாதிகள் நடத்திய மருத்துவமனை ஒன்றை தாக்கி நாசமாக்கினர். இஸ்ரேலிய படை...

ராணுவத்துடன் நடந்த சண்டையில் 40 விடுதலைப்புலிகள் பலி

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று நடந்த சண்டையில் 40 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் தங்கள் தரப்பில் 5 வீரர்கள் பலி ஆனதாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது. (more…)

12 ஆயிரம் இஸ்ரேல் வீரர்கள் லெபனானுக்குள் புகுந்து தாக்குதல்: ஏவுகணை வீசி தீவிரவாதிகள் பதிலடி

லெபனான் மீது இஸ்ரேல் 48 மணி நேர தாக்குதலை நிறுத்தி வைத்தது முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று மீண்டும் தாக்குதல் தொடங்கியது. பெய்ரூட் நகரத்தில் விமானம் மூலம் குண்டுகளை வீசினார்கள். அதே நேரத்தில் ஹிஸ்புல்லா...

இலங்கையின் கிழக்கே திருகோணமலைப் பகுதியில் கடும் மோதல்

இலங்கையின் கிழக்கே திருகோணமலைப் பகுதியில் இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் மோதல் நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மூதூர் நகரினையடுத்த பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், மூதூர்...

இலங்கை கடற்படை கப்பலுக்கு… -வைகோ

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கை தீவில் போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை திட்டமிட்டே மீறி உள்ள இலங்கையின் இனவாத சிங்கள...

இந்தியக் கூந்தலுக்கு லண்டனில் செம மவுசு!

உலகிலேயே இந்தியப் பெண்களின் கூந்தல் தான் ரொம்ப அழகு என்று லண்டனைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்று புராணங்களில விவாதம் நடந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறோம்....

இலங்கை போலீஸாருக்கு தமிழகத்தில் பயிற்சி: சட்டசபையில் மதிமுக எதிர்ப்பு

கோவையில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில், இலங்கையை சேர்ந்த 54 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்ட சபையில் மதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் இன்று மதிமுக உறுப்பினர்...

நெற்றிக்கண்ணுடன் அதிசயக் குழந்தை உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராட்டம்

சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் நெற்றிக்கண்ணுடன் அதிசயக் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். சென்னை திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரிக்கு (கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை) சனிக்கிழமை ஒரு பெண்...

பாகிஸ்தானில் மழைக்கு 24 பேர் பலி

பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்தது. இதில் 14 சிறுவர்கள் உள்பட 24 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். அறுந்த மின்சாரக் கம்பிகளை மிதித்ததால் மின்சாரம்...

காஸ்ட்ரோவுக்கு ஆபரேஷன்- ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தம்பியிடம் ஒப்படைத்தார்

கிïபா நாட்டின் அதிபர் காஸ்ட்ரோவுக்கு குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளதால் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்கவேண்டி இருப்பதால் அவர் ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தன் 75...

இஸ்ரேல் ராணுவம் முன்னேறாதபடி தடுத்து விரட்டி அடித்துவிட்டோம் – ஹிஸ்புல்லா

தெற்கு லெபனான் பகுதிக்குள் இஸ்ரேலிய ராணுவம் முன்னேறிவிடாதபடி தடுத்து, விரட்டி அடித்துவிட்டோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு செவ்வாய்க்கிழமை காலை அறிவித்தது. ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆயுதம் ஏந்திய அமைப்பான ஹிஸ்புல்லா இது தொடர்பாக அறிக்கை...

48 மணி நேர இடைவெளிக்குப்பிறகு இஸ்ரேல் விமான குண்டுவீச்சு மீண்டும் தொடங்கியது: 2 கிராமங்கள் தரைமட்டம்

இஸ்ரேல் விமானங்கள் மீண்டும் லெபனான் மீது குண்டு வீச்சை தொடங்கியது. பீரங்கி படையும் லெபனானுக்குள் நீண்ட தூரம் ஊடுருவி 2 கிராமங்களை குண்டுவீசி அழித்தது. லெபனான் மீது இஸ்ரேல் கடந்த மாதம் 12-ந்தேதி தாக்குதல்...

ஆயுத கிடங்கு தீப்பிடித்து எரிந்தது

இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள கலுத்துறையில் உள்ள ராணுவ கிடங்கு நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த துப்பாக்கிகள், வெடிபொருட்கள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின....

இலங்கையில் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து

திரிகோணமலை மாவட்டம் அல்லை என்ற இடத்தில் இருந்து கந்தளாய் என்ற இடத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ், நேற்று இரவு சென்றுகொண்டு இருந்தது. சேருநுவராய் என்ற இடத்தில் சென்றபோது, அந்த பஸ் கண்ணிவெடிகளில்...

சுவீடனும் கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேறுகிறது

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், திருகோணமலை துறைமுகத்தில், கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப்புலிகள் ஆர்ட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இதில் குறைந்தது 4 கடற்படையினர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன்,...

திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்தளத்தின் மீது கடும் தாக்குதல்கள்-பலர் பலி

இலங்கையின் கிழக்கே திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் இன்று பாரிய தாக்குதல் நடத்தியதாக இலங்கை ராணுவத் தரப்பு தெரிவிக்கிறது. துருப்புக் காவி கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைய...

சீனாவில் 18,000 ராணுவப் பள்ளிகள் திறப்பு

சீனாவில் இளைஞர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பள்ளிகளில் தேசிய பாதுகாப்புக் கல்வி மற்றும் நாட்டுப்பற்று ஊக்குவிப்பிற்காக 2 கோடி இளைஞர்கள் ஆண்டுதோறும் கலந்துகொள்கின்றனர். மேலும்,...

இராக்கில் ராணுவத்தினர்போல உடையணிந்து 26 பேர் கடத்தல்

இராக் தலைநகர் பாக்தாத்தின் முக்கியப் பகுதியில் ராணுவத்தினர் போல உடையணிந்து வந்தவர்கள் 26 பேரை திங்கள்கிழமை கடத்திசென்றனர். கடத்தல்காரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி 15 கார்களில் வந்தனர். இதிலிருந்து ஒரு பிரிவினர் மொபைல் போன் கடைக்குள்...

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்து 8 பேர் பலி; 16 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரில் மக்கள் கூடியிருந்த மசூதிக்கு வெளியே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். கடந்த 19-ம்...