கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பின் லேடனை வெறுக்கும் சவூதி அரேபியர்கள்

அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் பின் லேடனை சவூதி அரேபியர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. சவூதி அரேபியாவில் பின் லேடனுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்றும்,...

பெண்களிடம் கேலி: இருவர் கைது

புதுச்சேரியில் பாட்டுப்பாடி பெண்களை கேலி செய்த இரு இளைஞர்களை போலீஸர் திங்கள்கிழமை கைது செய்தனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், இளம் பெண்களையும் சிலர் பின் தொடர்ந்து சென்று சினிமா பாட்டுகள் பாடி கேலி...

அமெரிக்கத் தளங்கள் மீது அணுகுண்டு வீசுவோம்: ரஷியா எச்சரிக்கை

ஐரோப்பிய கண்டத்தில் ஏவுகணைத் தளங்களை அமைத்தால் அதை ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை வீசித் தாக்கி அழிப்போம் என அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரஷியாவின் ஏவுகணைப் பிரிவு பொறுப்பு அதிகாரி நிகோலை...

கார் ஏறி 3 பேர் இறந்த வழக்கு: 15 வயது சிறுவனுக்கு வலை வீச்சு- காப்பாற்ற விஐபிக்கள் முயற்சி

சென்னை அயனாவரத்தில் சமீபத்தில் பிளாட்பாரத்தில் கார் ஏறியதிலும், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது மோதியதாலும் 3 பேர் இறந்த சம்பவத்தற்கு 15 வயது சிறுவனே காரணம் என்று தெரிய வந்துள்ளது. அந்த சிறுவன், தேசிய...

இயக்குனர் சாமி புகார்

மிருகம்' படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியாவால் ரூ.25 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டதாக படத்தின் இயக்குனர் சாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். உயிர்' படத்தை இயக்கிய சாமி தற்போது "மிருகம்' என்ற இப்படத்தி இயக்கியுள்ளார்....

கல்லூரி மாணவி தற்கொலை

விரும்பிய படிப்பில் சேர முடியாததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் திருப்பானாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய...

நடிகை சரிதா விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தையில் இழுபறி பிப்ரவரி 18-ந்தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கில், நடிகை சரிதா மற்றும் அவரது கணவரும், நடிகருமான முகேஷ் ஆகியோர் நேற்று குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார்கள். பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. விவாகரத்து வழக்கு...

அண்டார்டிகாவில் மிகப்பெரிய டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு

அண்டார்டிகா பனி பிரதேசத்தில், பெர்ட்மோர் கிளேசியர் பகுதியில், கிர்க் பேட்ரிக் என்ற பனி மலை இருக்கிறது. இதில், 19 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் மிகப்பெரிய டைனோசர் மிருகத்தின் படிவம் கண்டு பிடிக்கப்பட்டு...

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு!!

எந்த தொடர்பும் இல்லாதவருடன் காரில் தனியாக இருந்த போது, ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு, சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மன்னிப்பு அளித்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது பெண், 2006ம் ஆண்டு,...

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பெஷாவர் அருகே கோகாட் என்ற ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டி...

சிறிய குடும்பம்; பெண் குழந்தையே வேணாம்!* இந்திய வட மாநில “ட்ரெண்ட்” இது

"சிறிய குடும்பம் போதும் பெண் குழந்தையே வேண்டாம்" இது தான், இந்திய வட மாநிலங்களில் பலவற்றில் இப்போது மக்களிடம் உள்ள மனப்போக்கு. கனடாவை சேர்ந்த ஆராய்ச்சி மையத்தின் நிதி உதவியுடன், டில்லியில் உள்ள தன்னார்வத்...

பெண் “துணை’ இல்லாமல் தவிக்கிறது அபூர்வ இரட்டைக்கொம்பு காண்டாமிருகம்

இந்திய அசாம் மாநில வனவிலங்கு சரணாலயத்தில் காண்டாமிருகங்களுடன் உள்ள, மோகன் என்ற ஆப்ரிக்க நாட்டு இரட்டை கொம்பு இன காண்டாமிருகம், பெண் துணையின்றி 30 ஆண்டுகளாக தவித்து வருகிறது. ஒற்றைக் கொம்பு பெண் காண்டாமிருகங்கள்...