திருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை 15 தமிழர்கள் கைது

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களில் நேற்று இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து கடுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதில் 15 தமிழ்இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் திருகோணமலையில் உள்ள சாம்பல்தீவு நிலாவெளி செல்வநாயகபுரம் மற்றும்...

யசூசி அகாசி இன்றிரவு இலங்கை வருகிறார்..

ஜப்பானின் இலங்கைக்கான விஷேட தூதுவர் யசூசி அகாசி மூன்றுநாள் விஜயம் ஒன்றைமேற்கொண்டு இன்றிரவு இலங்கை வரவுள்ளார் இவர் வவுனியாவுக்கு விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவாரண கிராமத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. அத்துடன் தமது...

பிரபாகரன் புதுமாத்தளனில்.. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை டிச.31க்கு முன் மீள்குடியேற்ற முடிவு.. செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பொது மக்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம்...

பாதுகாப்பு வலய பிரதேசத்தில் 7 தற்கொலைத் தாக்குதல்கள்.. 24 மணி நேரத்தினுள் சம்பவம்

பாதுகாப்பு வலய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள் மாத்திரம் புலிகள் ஏழு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வலைஞர் மடத்திற்கு தெற்கே இரட்டை வாய்க்கால் பிரதேசத்தில்...

மட்டக்களப்பில் மாணவி கடத்தல்; பெற்றோர் உறவினர் ஆர்ப்பாட்டம்.. குற்றவாளிகளை பிடிக்க அமைச்சர் கருணாஅம்மான் வேண்டுகோள்

மட்டக்களப்பு, கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவி இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து மட்டக்களப்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சதீஸ் குமார் தினூஷிகா (8 வயது) என்ற மாணவியே கடத்தப்பட்டவராவார்....

முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளின் 4 படகுகள் அழிப்பு, 25 புலிகள் பலியென கடற்படை தகவல்

முல்லைத்தீவு, கடற்பரப்பில் நடமாடிக் கொண்டிருந்த கடற்புலிகளின் ஆறு படகுகளை கடற் படையினர் முற்றாக தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் கடற்...

பிரபா இறுதிநேரத்தில் தப்பிச்செல்ல பாரிய 11 படகுகள் தயார் நிலையில்.. ‘புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் எட்டியுள்ளது’ என்கிறார் உதய நாணயக்கார

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இறுதி நேரத்தில் தப்பிச் செல்வதற்காக சகல வசதிகளையும் கொண்ட 11 பாரிய படகுகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது...

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டும் : ப.சிதம்பரம்

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டு மென்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,”இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் அரசசார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களுடன் கொழும்பில் சந்திப்பு

அரச சார்பற்ற நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்தில் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டதாக ஜீரிஎன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியில் இருந்து...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கையில் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும்:கருணா அம்மான்

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப் படக் கூடாது என அமைச்சர் கருணா தெரிவித் துள்ளார். சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த குற்றங்களை...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் காணவில்லை

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார் மட்டக்களப்பு பூம்புகரையைச் சேர்ந்த சந்திஷ்குமார் வினுஷிகா (வயது 08) என்ற மாணவியே இவ்வாறு காணமல்...

இந்தஆண்டு முடிவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -ஊடக அமைச்சர்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு முடிவதற்குள் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதிக்கு பின்னர் நடைபெறுமெனவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலில்...

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூடாரங்கள் யூ.என்.எச்.ஆர்.சி அனுப்பி வைப்பு

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவியாக 2850 கூடாரங்கள் முதல் தொகுதி உதவியாக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் டுபாய் களஞ்சியத்திலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்துள்ள...

அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் -தமிழக காங்கிரஸ்

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு...

சுவீடன் வெளிவிவகார அமைச்சின் வீஸா விண்ணப்பம் மறுக்கப்படவில்லை -இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு

சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது சுவிடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக வீசா விண்ணப்பம் எதனையும்...

போர் நிறுத்தம் ஒன்றை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை -.ஊடக அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு

அனைத்துலக சமூகத்திடம் இருந்து எந்தளவுக்கு அழுத்தங்கள் வந்தாலும் போர் நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப் படுத்தாது என ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொழும்பில் தகவல் திணைக்களத்தில் இன்று...

காட்டு யானையைக் குறிவைத்த துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி

மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகல பிரதேசத்தில் காட்டுயானையை கலைப்பதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்க இலக்காகி இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மரணமடைந்த இராணுவ சிப்பாய் மதவாச்சியை சேர்ந்த 29வயதான...

பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் -ஜனாதிபதி

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் அவர் இலங்கையின் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவாரென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீ.என்.என் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். நீதிமன்ற விசாரணைகளின் பின்னரே பிரபாகரனை...

இலங்கை நிலவரம் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் ஒபாமா

இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின்...

184 வாக்குகள் மட்டுமே பதிவான வாக்களிப்பு நிலையம்..

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை தொகுதியில் அத்தலே பகுதியில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் 184வாக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாக வாலிதுநுவர பிரதேச செயலாளர் அனோஜா கமகே தெரிவித்துள்ளார் இப்பகுதியிலுள்ள வீதியொன்றைத் திருத்திதஇ தரக்கோரியே இப்பகுதியில் மக்கள் வாக்களிப்பதிலிருந்து...

தயாமாஸ்டர் ஜோர்மாஸ்டரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் மேலதிக விசாரணைக்காக இரகசிய பொலிஸாரிடம் கையளிக்கப் பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா சென்ற விஷேடபொலிஸ் குழுவினர் அவர்களை பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து...

தனி ஈழத்துக்கு இலங்கையில் இடமில்லை: கோத்தபய ராஜபட்ச

தனி ஈழத்துக்கு இலங்கையில் இடமில்லை. வேறு இடத்தைப் பாருங்கள் என்று இலங்கை பாதுகாப்புச் செயலரும் அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச காட்டமாக கூறியுள்ளார். தனி ஈழம் அமைத்துத் தரப்படும் என்று அதிமுக பொதுச்...

இலங்கைக்கான தூதுவரை மீள அழைக்கிறது சுவீடன்

சுவீடனில் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின்...

தேர்தல் தினத்தில் மாணவரை கொலை சந்தேக நபர் கல்கிஸ்ஸையில் கைது

இரத்மலான படோவிட்ட பகுதியில் தேர்தல் தினத்தன்று பாடசாலை மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கல்கிஸ்ஸை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல்மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற கடந்த சனிக்கிழமை ஒரே...

அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை கடைப்பிடிக்கவேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்

இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டுமென நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்களை...

பிரபாகரனை நெருங்குகிறது ராணுவம்!!!

முல்லைத் தீவில் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக அறிவித்துள்ள இலங்கை ராணுவம், பிரபாகரன் மறைந்துள்ள பகுதியையும் மிகவும் நெருங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் வசம் இருந்த வளையார் மடத்தையும் பிடித்து விட்டதாக ராணுவம்...

தமிழ்ப் பகுதிகளுக்கு தங்களால் செல்ல முடியாதுள்ளது: இரா.சம்பந்தன்

தமிழ்ப் பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய தங்களால்க்கூட செல்லமுடியாத நிலையிருப்பதாக இந்தியப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் பகுதிகளுக்கோ அல்லது முகாம்களுக்கோ தாம் செல்வதற்கு...

பிரபாகரன் கிழக்கு பகுதிக்கு தப்பினார்???

வன்னி போர் முனையிலிருந்து பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரும் தப்பிச் சென்றுவிட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் தலைவர்...

லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்: 5 தமிழர்கள் கைது

லண்டனில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதாக 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் போர் நிறுத்ததை வலியுறுத்தி பிரிட்டன் வாழ் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ்...

உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதைப் போல அல்லாமல், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம்...

போர்நிறுத்தம் இல்லை; அனைத்து மக்களும் விடுவிக்கப்படும் வரை மீட்பு நடவடிக்கை தொடரும்: ஜனாதிபதி

விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களில் இறுதியாகவுள்ள ஒருவர் மீட்கப்படும் வரை மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்துக்குள் இன்னமும் விடுதலைப் புலிகள் இருப்பதாக புலனாய்வுத்...

ஜோன் ஹோல்ம்ஸ் வவுனியாவுக்கு சென்றுள்ளார்

இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் செட்டிகுளம் நலன்புரி முகாம்களுக்கு சென்றுள்ளார். நேற்று திங்கட்கிழமை நலன்புரி முகாம்களுக்கு சென்றுள்ள ஜோன் ஹோல்ம்ஸ், அங்கிருக்கும் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன்,...

அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்கவேண்டும்: பிரித்தானியா

விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக்குப் பதிலாக இலங்கை அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்க வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் மூலம் மோதல்ப் பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறமுடியுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட்...

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அனுமதி மறுப்பு

சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்டின் இலங்கை விஜயத்துக்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய வெளிவிவகராச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் மற்றும் சுவீடன்...

கல்முனையில் நகை வியாபாரி குத்திக்கொலை

கல்முனையை சேர்ந்த நகைவியாபாரியான அஹமது லெப்பை றபீக்தீன் வயது38 என்பவரே இனந்தெரியாத ஆயுததாரிகளினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளின் தந்தையான கல்முனைக்குடியை சேர்ந்த அஹமது லெப்பை றபீக்தீன் என்பவர் நேற்ற முன்தினம் பி.ப சம்பாந்துறை...

கல்கிசை பஹத்தோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

மேல் மாகாணசபைத் தேர்தல் தினத்தன்று கொழும்பு புறநகர்ப் பகுதியான கல்கிசை பஹத்தோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேச வீடொன்றில் இருந்தபோதே சந்தேகநபர்...

மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது காவலாளி சூடு, ஒருவர் பலி

புத்தளம் மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது தோட்டக் காவலாளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 8.30அளவில் இடம்பெற்றதாகவும், சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பஸ்தரான 48வயதுடைய பீ.எம்.சுமதிபால எனவும்...

புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பட்ட புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழு வயது, ஒன்பது வயது பத்து வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு...

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்: போர்நிறுத்தமில்லை என்கிறது இராணுவம்

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும்இ இது போர்நிறுத்தம் இல்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தும்...