யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேற்ற அனுமதிக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம்

யுத்தத்தில் ஈடுபடாதவர்களை தடுப்பு முகாமுக்கு வெளியே தங்குவதற்கு இடமுள்ளவர்களும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 5பேர் கொண்ட...

களுவான்கேணியில் சுடப்பட்டவர் மீள்குடியேற்றவாசி எனத் தகவல்..!

நேற்றுமுன்தினம் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர் வவுனியா நலன்புரி நிலையமொன்றில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் திரும்பியவர் எனத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது 27வயதான நடராஜா பாஸ்கரன் என்ற இந்த நபர் ஏற்கனவே விடுதலைப்புலிகள்...

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லியாம் பொக்ஸ்!

இலங்கை வந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். அங்கு அவர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ்மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவினரை சந்தித்து...

தென் மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் திகதி

தென் மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பாளர் நியமனப் பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நேற்று நிறைவடைந்ததன் பின்னர், தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் தலைமையகம் அறிவித்தது. இந்தத் தேர்தலில்...

டாக்டர் பாலித கொஹன பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பதவியை முடித்துக்கொன்டு ஐக்கிய நாட்டுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்ட்டிருக்கும் டாக்கடர் பாலித கொஹன அவர்கள் நேற்று(ஆக:27) பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ரஜபக்க்ஷ அவர்களை உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில்...

மசாஜ் கிளினிக் என்ற பெயரில் இரகசியமாக இயங்கி வந்த விலை மாதர் இல்லம்!

இரகசியமாக இயங்கி வந்த விலை மாதர் இல்லம் ஒன்றை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர் இந்த முற்றுகையின் போது சந்தேகத்தின் பேரில் ஏழு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் கைது...

மேலை நாடுகளிலிருந்து அணுஆயுதங்களை பெற முனைந்த புலிகள்!

மேலைநாடுகளில் இருந்து அணுஆயுதங்களை புலிகள் பெறமுயன்றனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை கைதாகியுள்ள அந்த இயக்கத்தின் புதிய தலைவர் கே.பி. என்று அறியப்படும் செல்வராசா பத்மநாதன், தன்னிடம் விசாரணை நடத்திவரும் இலங்கை அதிகாரிகளிடம்...

இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோக்கள் ஜேர்மனியில் உள்ள சிங்கள புலிகளாலேயே விநியோகம்..

இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை ஜேர்மனியில் உள்ள சிங்கள விடுதலைப்புலி உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தினர் தமிழர்களை படுகொலை செய்வதாக சித்தரிக்கும் போலியான காட்சிகள்...

சம்பள உயர்வு கோரி இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்..!

இவ்வருடத்துக்கான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்குமாறு கோரி இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சங்கம் இன்று 28ம் திகதி நடத்தவுள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய நாடுமுழுவதிலும் பணிபுரியும் மின்சார...

பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மையை இலங்கைஅரசு நிராகரிப்பு

இலங்கை இராணுவ வீரர் ஒருவர் இரண்டுபேரை சுட்டுக்கொல்லும் காட்சி பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதை அடுத்து லண்டணிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது சேற்றுத்தரையில்...

தென் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மூன்று மாவட்டங்களிலும் சமர்ப்பிப்பு!

தென் மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மூன்று மாவட்டங்களிலும் கையளிக்கப்பட உள்ளன. மூன்று மவாட்டங்களுக்குமான ஐ.ம.சு. முன்னணியின் குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு காலிமாவட்ட குழுத்தலைவராக முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால்...

இரண்டரை ஆண்டுகளில் 14 பெண்களை மணந்த நபர்!

இந்தியா மும்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் 14 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஒவ்வொருடன் தனி தனியான இடங்களில் 14 வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மும்பையை சேர்ந்தவர் துஷார் வாக்மரே. ஏர் இந்தியா நிறுவனத்தில் என்ஜினியராக...

‘தம்’ அடிப்பதில் இந்திய பெண்களுக்கு 3 வது இடம்!!

உலக அளவில் அதிகம் தம் அடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

நிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா!

வீட்டில் இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன். அதுதான் எனக்குப் பிடித்துள்ளது என்கிறார் அமெரிக்க நடிகை அலிசியா சில்வர்ஸ்டோன். அலிசியாவுக்கு இப்போது 32 வயதாகிறது. ஹெல்த் என்ற இதழுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில்,...

ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திரகுமார ராஜபக்ஷ நேற்று கடமைகள் பொறுப்பேற்பு

ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திரகுமார ராஜபக்ஷ நேற்றுக்காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் நேற்று தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், முதலமைச்சரின் தந்தையாரான அமைச்சர் சமல் ராஜபக்ஷ,...

வவுனியா அரச அதிகாரிகள் விடுதிகள் மீது இனந்தெரியாதவர்கள் கல்வீச்சு

வவுனியா உள்சுற்று வீதியில் அமைந்துள்ள அரச திணைக்கள அதிகாரிகளின் விடுதிகள் மீது இரவு நேரத்தில் கல்வீச்சு நடத்தியவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் வலைவிரித்துள்ளனர். நேற்று இரவு 11.15மணியளவில் இந்த கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸாரிடம்...

மீள் பிரேத பரிசோதனையில் மஸ்கெலிய சிறுமிகளின் சடலங்கள்..

கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு பின்னர் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளான சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன மீள் பரிசோதனைக்காக சடலங்கள் இன்று 27ம்...

மாத்தறை கம்புறுபிட்டி கஹபொல பகுதியில் இளம்பெண் காதலரால் குத்திக்கொலை!

மாத்தறை கம்புறுபிட்டி கஹபொல பகுதியில் இளம்பெண் ருவர் அவரது காதலரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. றுகுணு பல்கலக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவியான இவர் தனியார் மருத்துவ நிலைம் ஒன்றில் தனது...

இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளியீடு!

இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகளை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இந்த இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சிக்கிய விடுதலைப் புலிகள் என நம்பப்படுகிறது. இந்த விடியோ காட்சியில் சில...

பருவமழைக்கு முன் மன்னாரில் வயல்களில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படும் -இந்திய கண்ணிவெடி அகற்றும் குழு!

முன்னாரில் விளைநிலப் பகுதிகளின் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் நிறைவு செய்து விவசாயிகளுக்கு கையளிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கண்ணிவெடி அகற்றும் குழு தெரிவித்துள்ளது இந்த கண்ணிவெடிகளை ஜப்பான் அரசாங்கத்தின் நிதி...

வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதகுமார் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதகுமார்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வவுனியா அரசாங்கஅதிபர் திருமதி பீ.எஸ்.எம் சார்ல்ஸ் தெரிவித்திருந்தார். மன்னார்,...

கொழும்பில் மூவர் கடனட்டை மோசடி தொடர்பில் கைது

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று ஒழுங்கமைக்கப்பட்ட கடனட்டை மோசடிக்குழுவைச் சேர்ந்த 3பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவர்கள் சுமார் 800 கடனட்டைகளை பயன்படுத்தி 100 மில்லியன் பெறுமதியில் பணம் மற்றும் பொருட்களையும் கொள்வனவு...

2008 வருடாந்த அறிக்கையின்படி பொலிஸாருக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் -பொலிஸ் ஆணைக்குழு தெரிவிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது 2008ம் ஆண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில்...

மட்டக்களப்பில் யானை மிதித்து ஒருவர் பலி

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வெள்ளாவெளி பெரிய போரதீவு பிரதேச சேயலாளர் பிரிவில் கராஜில் காவலாளியாக கடமையாற்றியவரையே யானை மிதித்ததால் பலியானார் இச்சம்பவம் நேற்று 26 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்றுள்ளது வழமையாக பழுகாமத்தினைச் சேர்ந்த நபர்...

ரஷ்ய காதலியை மணக்கிறார் மார்ட்டினா நவ்ரத்திலோவா!

தனது நீண்ட நாள் காதலியான ரஷ்யாவைச் சேர்ந்த ஜூலியா லெமிகோவாவை மகளிர் டென்னிஸ் உலகின் ஜாம்பவானான மார்ட்டினா நவ்ரத்திலோவா மணக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ட்டினாவுக்கு 52 வயதாகிறது. அவரது காதலியான ஜூலியாவுக்கு 36 வயதாகிறது....

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-7)

இந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம்... இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார் - முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா...

கல்முனைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது புலி உறுப்பினர்கள் இருவர் கொலை

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையொன்றின்போது புலி உறுப்பினர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை பெரியமுனை களப்பில் நேற்றிரவு 9.00அளவில புலி உறுப்பினர்களை அவதானித்த பாதுகாப்புப் படையினர்...

திருமலையில் விவசாயம் மேற்கொள்ளப்படாதிருந்த பத்தாயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கை

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 வருடங்களாக விவசாயம் மேற்கொள்ளப்படாதிருந்த பத்தாயிரம் ஏக்கர் விவசாய விளைநிலத்தில் இம்முறை பெரும்போக விவசாயம் மேற்கொள்வதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது....

தமிழர் பிரச்சினை குறித்து பராக் ஒபாமா அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிக்காகோ கல்லூரி மாணவர்கள் மூவர் நீண்ட நடைப்பயணம்

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பராக் ஒபாமா அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மூவர் நீண்ட நடைப்பயணப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிக்காகோ நகரத்திலிருந்து வாஷிங்ரன்...

களுபோவில வைத்தியசாலையில் உடல்எடையைக் குறைக்க சிகிச்சை பெற்ற யுவதி உயிரிழப்பு!

களுபோவில பொது வைத்தியசாலையில் தனது உடல்எடையைக் குறைக்க யுவதியொருவர் சிகிச்சை மேற்கொண்டபோது அவருக்கான சத்திரசிகிச்சையில் அவர் உயிரிழந்துள்ளதாக களுபோவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்தினபுரி நகர எல்லையைச் சேர்ந்த சமகிபுர, ஷாலிகா என்.குணரட்ன...

படையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானது என்கிறது அரசாங்கம்

இலங்கை அரசாங்கப் படையினர் தமிழ் மக்களை சித்திரவதை செய்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவப் படைவீரர்கள் போன்று சீருடை அணிந்த நபர்கள் இரண்டு பொதுமக்கள் மீது துப்பாக்கிப்...

பலவருடகாலம் மர்மமாக இருந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் இரகசியங்கள் அம்பலம்..

அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பல வருட காலமாக மர்மமாக இருந்து வந்த இரகசியங்கள் தற்பொழுது கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து அம்பலமாகியுள்ளன என்று ஆங்கில...

காலி கடற்படை முகாம் மீது முன்பு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் புலிகளின் படகு ஹம்பாந்தோட்டையில் மீட்பு!!

காலி கடற்படை முகாம் மீது விடுதலைப்புலிகளினால் நடத்திய தாக்குதலுக்கு பயன்படுத்திய வள்ளம் ஹம்பாந்தோட்டைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது 2006ம் ஆண்டு காலி கடற்படை முகாம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு...

விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஜெயரட்ணம் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்!

விடுதலைப் புலிகளினால் சுமார் 4வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கல்கிஸ்ஸை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக சேவையாற்றிய ஜெயரட்ணம் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தெரியவருகையில் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம்...

11மாதங்கள் நிரம்பிய குழந்தையை 50ஆயிரம் ரூபாவுக்கு விற்கமுற்பட்ட தாய் உள்ளிட்ட மூவர் கைது!!

11மாதங்கள் நிரம்பிய குழந்தையொன்றை 50ஆயிரம் ரூபாவுக்கு விற்பனைசெய்ய முற்பட்டதாகக் கூறப்படும் மாத்தறையின் அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவிடயமாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட...

நாம் இழந்ததை இழக்கப்பட்டதை மீண்டும் பெற்றுக் கொள்வதே உண்மையான வெற்றி -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தது மட்டுமே எமக்கு கிடைத்த உண்மையான வெற்றி என நாம் நினைத்துவிடக் கூடாது நாம் இழந்ததை இழக்கப்பட்டதை மீ;ண்டும் பெற்றுக் கொள்வது உண்மையான வெற்றியாகும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-6)

கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...