மக்கா: பலி எண்ணிக்கை அதிகரிப்பு – இலங்கையர்கள் பாதித்ததாக தகவல் இல்லை!!

சவுதி அரேபியாவின் மக்காவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மக்கா மசூதிக்கு வெளியே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது....

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக!!

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற...

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – எவரும் கைதுசெய்யப்படவில்லை!!

கடுவலை நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரு சந்தேகநபர்கள் தப்பி ஓடியமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற வேளை, அங்கிருந்த...

கொடதெனியா சிறுமி வழக்கு – அடுத்தது என்ன..?

கொடதெனியா பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா சதெவ்மியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள பிரதான சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இரவு...

மக்கா – நெரிசலில் சிக்கி 100 பேர் பலி, 390 பேர் காயம்!!

மக்காவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்காவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். பக்ரீத் தினமான இன்று அதிக அளவிலானவர்கள்...

மகளின் திருமண விடயத்தில் முரன்பாடு – மருமகனை கொன்ற மாமனார்!!

படபோல - படதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மருமகனைக் கொலை செய்துள்ளார். தனது இளையமகளுக்கு வந்த திருமண வரன் ஒன்று தொடர்பில் எப்போதும் மருமகன் எதிர்ப்பு தெரிவித்து வந்தமையே...

சிறுமியை கொன்றது நானே! ஒப்புக்கொண்ட சந்தேகநபர்!!

கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ் ஊடகப்...

இலங்கையை இந்திய அரசு கடுமையாக கண்டிக்க வேண்டும்!!

இந்திய மத்திய அரசு மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுடன் சம்பிரதாயத்திற்காக பேசுவதை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு காலக்கெடுவிற்குள் இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என, த.மா.கா. தலைவர்...

மீட்கப்பட்ட வாகனம் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானதா?

ஹங்வெல்ல - ஜல்தர பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த வாகனம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த ஒன்றா என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அது குறித்து...

தங்கம் கடத்த முற்பட்ட இருவர் கைது!!

சட்டவிரோதமாக ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த சந்தேகநபர்கள் பயணப் பையில் இருந்து குறித்த...

கொட்டகலையில் மின்சார வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக பலி!!

கொட்டகலை பிரதேசத்தில், மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (24) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டகலை...

வடக்கில் 860 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!!

அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்த பெற்றோர் என 860 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப...

சுயாதீன ஆணைக்குழு குறித்து கலந்துரையாடல்!!

சுயாதீன ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் முறையான பொறிமுறையை பின்பற்ற அரசியலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. சிவில் சமூக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அரசியலமைப்புச் சபை நேற்று மாலை சபாநாயகர் தலைமையில்...

மார்த்தாண்டத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!!

குழித்துறை அருகே அமரிவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி சுதா (வயது 24). இவர் நேற்று மாலை பொன்விளையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். கழுவன்திட்டை பகுதியில் நடந்து சென்று...

செல்போனில் மிரட்டல்: திருச்செங்கோட்டில் பள்ளி மாணவி தற்கொலை!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோக்கவாடி புதுநெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). விசை தறி தொழிலாளி. இவருக்கு நவீன்குமார்(16) என்ற மகனும், சுஷ்மிதா (14) என்ற மகளும் உள்ளனர். மகன்...

விருத்தாசலம் அருகே கடன் தொல்லையால் 4 பேர் விஷம் குடித்தனர்!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வி.சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49), விவசாயி. இவரது மனைவி வள்ளி (40). இவர்களுடைய மகன் வீரமுத்து (15). 10–ம் வகுப்பு மாணவன். மகள், முத்துலட்சுமி (14),...

பேச்சிப்பாறையில் நர்சிங் மாணவியுடன் வாலிபர் உல்லாசம்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!

பேச்சிப்பாறை வேம்பன் மூட்டுவிளையைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 35). திருமணம் ஆகவில்லை. இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் குலசேகரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் லேப்–டெக்னீசியன்...

குமாரபாளையம் அருகே பேரன்–பேத்திக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பாட்டி!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி சவுண்டம்மாள். விசை தறி தொழிலாளர்கள். இவர்களது மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகனும், மருமகளும் சில வருடங்களுக்கு...

பொட்டு சுரேஷ் கொலையில் முழு பின்னணியை சொல்ல மறுப்பு: அட்டாக் பாண்டியிடம் தீவிர விசாரணை!!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக திகழ்ந்தவர் பொட்டுசுரேஷ். கடந்த 2013–ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். பொட்டுசுரேஷ் கொலையில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி 2½ ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் மும்பையில்...

ஓமலூர் பஸ் நிலையம் அருகே போதையில் கிடந்த அரசு பேருந்து கண்டக்டர்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே மேட்டூர் பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் போதையில் உருண்டு புரண்டு கொண்டிருந்தார். அவர் அப்படி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் முகம் சுழித்து கொண்டு...

தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!

திருஷ்டியைக் கழிப்பதற்கு வெள்ளை பூசணியைப் பயன்படுத்துவோம். ஆனால் அந்த வெள்ளைப் பூசணி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க உதவுகிறது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதில்...

இந்து கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கை அறுப்போம் – ஸ்ரீ ராம் சேனா!!

இந்து கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கை அறுப்போம் என்று சர்ச்சைக்குரிய ஸ்ரீ ராம் சேனா அமைப்பை சேர்ந்த இந்துத்துவ தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தேசிய வார இதழ் ஒன்றில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கர்நாடக...

ஒடிசாவில் பரபரப்பு: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தை அறுத்து மர்ம கொலை!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆய்வாளர், அவரது மனைவி மற்றும் அவர்களின் இரு பெண் குழந்தைகள் கழுத்தை அறுத்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

சந்திரகிரி பகுதியில் காரில் கடத்திய ரூ.30 லட்சம் செம்மரம் பறிமுதல்: 2 பேர் கைது!!

சந்திரகிரி அருகே சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சொகுசுகாருடன் 22 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில் செம்மரகட்டைகள் கடத்தலை தடுக்க...

ஐ.நா அறிக்கையை நிராகரிக்குமாறு மஹிந்த விடுத்த கோரிக்கை தொடர்பில் ராஜித்த!!

எவன்காட் சம்பவம் குறித்து தொடர்ந்தும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற...

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு – இருவர் தப்பி ஓட்டம்!!

கடுவலை நீதமன்றத்தின் முன் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை...

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பது குறித்த யோசனையை முன்வைக்க குழு!!

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய நடவடிக்கைகள் தொடர்பிலான யோசனையை முன்வைக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த...

யாழில் மணமான பெண்ணைக் கடத்தி துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது!!

யாழ். ஊர்காவற்துறை - வேலணை பகுதியில் 21 வயது திருமணமான பெண்ணைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீட்டில் கணவருடன் உறங்கிக்கொண்டிருந்த யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல்...

ஐமசுகூ உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நிதி தொடர்பிலான ஒழுங்கு விதிகள் குறித்து பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தை புறக்கணித்தே இவர்கள் இவ்வாறு...

கொள்ளுப்பிட்டியில் ஆஸி. பிரஜை சடலமாக மீட்பு!!

கொள்ளுப்பிடிய - ஆர்.ஏ.த.மெல் மாவத்தை பகுதியின் ஹோட்டல் அறையொன்றில் இருந்து வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 11.00 மணியளவில் வௌியேறுவதாக இருந்த இவர் நண்பகல் ஆகியும் வௌியேறாத நிலையில் ஹோட்டல்...

வாக்குமூலத்தைப் பெற மஹிந்தவின் வீட்டுக்கே சென்ற ஆணைக்குழு!!

முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சென்றுள்ளனர். முன்னதாக வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று...

சமையல் எண்ணைக்கான வரி அதிகரிப்பு!!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணைக்கான வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ எண்ணைக்கான விஷேட பாண்ட வரி 90 ருபாவில் இருந்து 110 ரூபாவாக...

ஐ.நா அறிக்கையை முற்றிலும் ஏற்கவோ நிராகரிக்கவோ தேவையில்லை!!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வௌியான பின்னரே கூட்டு அரசாங்கத்தின் பெறுமதி தெரிந்துள்ளதாக, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...

சிறுமி கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!!

கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா - படுவத்துகொட வனப் பகுதியில் இருந்தே குறித்த சந்தேகநபர் கைது...

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பசறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாக ஊவா மாகாண முதலமைச்சர் மீது அண்மையில் முறைப்பாடு...

யாழ் நீதிமன்ற தாக்குதல் – 20 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!

யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 20 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற...

இம் மாத உதவித் தொகை தாமதம் – அல்லலுறும் அகதிகள்!!

இலங்கை தமிழர் அகதிகள் முகாமில், ஒவ்வொரு மாதமும், 5ம் திகதி வழங்கப்படும் உதவித்தொகை, இம்மாதம் இதுவரை வழங்கப்படவில்லை என, அகதிகள் தெரிவிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் அகதிகள் முகாமில், 935 குடும்பங்களைச் சேர்ந்த, 3,085...

கைதாகி நான்கு மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பா.உ!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கடந்த மே மாதம்...

இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை – காரணம்…?

நொச்சியாகம - வில்பத்து இராணுவ முகாமிலுள்ள சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 21ம் திகதி அதிகாலை இவர் இராணுவ முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில்...