Breaking News

கண் பார்வையிழந்த தொழிலாளிக்கு 10 வருடங்களின் பின் நஷ்டஈடு: மலேசியாவில் சம்பவம்

மலேசியாவில் முதலாளியின் அசிட் வீச்சிற்கு உள்ளாகி கண்பார்வை இழந்த இந்திய தொழிலாளிக்கு ஏழு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்கும்படி பத்து வருடங்களின் பின்னர் மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மலேசியாவில் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை...

இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்க செக்கோஸ்லவாக்கியா முன்வந்துள்ளது

ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினருக்கான நவீன ராடர் கருவிகள் மற்றும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை வழங்குவதற்கான அத்தியாவசிய ஏற்பாடுகளுக்காகச் செக்கோஸ்லவாக்கியா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் எதிர்வரும் 2008 ஜனவரி...

முஷரப் வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும்; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

பாகிஸ்தான் அதிபர் முஷரப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது செல்லாது என்று அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று 11 நீதிபதிகள் பெஞ்ச் அறிவித்தது. பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் கடந்த 6-ந்தேதி...

ஆபாச படமெடுத்து மிரட்டல்- பெண் புகார்

தன்னை நிர்வாண படம் எடுத்து வைத்து மிரட்டி வருவதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தை சேர்ந்தவர் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரைப்...

புத்தகத்திற்குள் துளை போட்டு செல் பதுக்கிய மாணவி

பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் புத்தகத்திற்குள் செல்போனை பதுக்கி வைத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் செல்போன் தடை உத்தரவைத் தொடர்ந்து...

நகைக்காக தாயை கடத்திய நவீன புத்திரன்!

பட்டுக்கோட்டையில் நகைக்காக பெற்றத் தாயையை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை அடுத்துள்ள அணைக்காடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமித் தேவர்.இவரது மனைவி அஞ்சம்மாள்(60). இவர்களுக்கு முருகேசன் என்ற ஒரு மகன் உள்ளார்....

கனடாவில் தீ விபத்து புரளி: நடிகர் விஜயகாந்த் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தார், 3 மணி நேரம் தவிப்பு

கனடா ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஜயகாந்த் தீ விபத்து புரளி காரணமாக ஓட்டலை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரும், அவரது மனைவியும் 3 மணி நேரம் ஓட்டலுக்கு வெளியிலேயே நின்று தவித்தனர். நடிகரும்,...

துப்பாக்கி முனையில் அ.தி.மு.க. செயலாளரை கடத்தி ரூ.3 லட்சம் பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது57) அ.தி.மு.க. கிளை செயலாளராக இருக்கிறார். கண்ணன் கிழங்கு வியா பாரம் செய்து வருகிறார். அந்தப்பகுதியில் கிழங்கு வகைகளை கொள்முதல் செய்து கோயம்பேடு...

கன்னட பிரசாத் காதலி நடிகை குசும் விபசார வழக்கில் கைது

சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல புரோக்கர் கன்னட பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் பிடிபட்டான்.சென்னை நட்சத்திர ஓட்டலில் அவன் சுற்றி வளைத்து கைது செய்யப்பட் டான். அவனுடன் அவனது காதலி நடிகை குசும், உதவி...

பிலிப்பைன்ஸ் நாட்டில்: வணிக வளாகத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலி; 70 பேர் காயம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் உள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 8 பேர் பலியானார்கள். 70 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் மகதி என்ற வர்த்தக பகுதியில் குளோரியட்டா...

`நடிகை கரீனா கபூரை காதலிப்பது உண்மை’: இந்தி நடிகர் சைப் அலிகான் பேட்டி

இந்தி நடிகை கரீனா கபூர் உடனான காதலை நடிகர் சைப் அலிகான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதியின்...

தோணிக்கல் குட்செட்வீதியில் கிராம சேவையாளர் சுட்டுக்கொலை!!

வவுனியா தோணிக்கல் குட்செட்வீதியில் கிராம சேவையாளர் ஒருவர் ஆயுதபாணிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இவர் மரைக்காரம்பளை பகுதிக்கான கிராமசேவையாளரான குமாரவேல் குமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். குட்செட் வீதியில் அமைந்துள்ள இவரது இல்லத்திற்கு சென்ற...

கொச்சி வந்த கப்பலில் நியுயார்க் நகர குப்பைகள்: சுங்க இலாகாவினர் அதிர்ச்சி

கொச்சியை சேர்ந்த நிறுவனம் ஒன்று அமெரிக்காவின் நியுயார்க்கில் இருந்து பழைய காகிதங்களை இறக்குமதி செய்தது. இந்த காகிதங்கள் அடங்கிய 4 கண்டெய்னர்கள், ஒரு கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கடந்த 2...

கராச்சியில் பயங்கரம்: பெனாசிரை கொல்ல முயற்சி- தற்கொலைப்படை தாக்குதலில் 133 பேர் பலி

பாகிஸ்தானில் 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி ஏற்பட்டதால் மக்கள் கட்சி தலைவர் பெனாசிர் லண்டன் சென்று குடியேறினார். சமீபத்தில் அவருக்கும் அதிபர் முஷரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. இத னால் பெனாசிர் 8 ஆண்டுக்குப்பிறகு பாகிஸ்தான்...

பிரான்ஸில் புலிகளின் 5 உறுப்பினர்கள் கைது

பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட ஏனைய முக்கிய நகரங்களிலும் செயற்படும் புலிகள் இயக்கத்தினரின் புதிய தலைவராக பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்த ஸ்ராலின் சவரிமுத்து எனப்படும் புலிகள் இயக்கப்பிரமுகர் உட்பட ஐந்து முக்கிய புலிகள் இயக்க உறுப்பினர்களை...

ஜெர்மனியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் வேலைநிறுத்தம்

ஜெர்மனியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் இந்த வாரத்தில் 2-வது முறையாக நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில் பயணிகள் அலுவலகங்களுக்கு செல்லமுடியாமல் சிரமப்பட்டனர். அந்த நாட்டில் உள்ள...

தைப்பொங்கல் தினத்தன்று புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யத் திட்டம்

எதிர்வரும் தைப்பொங்கல் நாளில் தமிழீழப் பிரகடனத்தை புலிகள் வெளியிடுவார் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுகுறித்து அவர் கூறியதாவது. தமிழீழ விடுதலைப் புலிகள்...

அண்டார்டிகாவில் 10 லட்சம் சதுர கி.மீ.பரப்புக்கு இங்கிலாந்து உரிமை கோருகிறது

மனித இனமே இல்லாத பனிப்பலைவனமான அண்டார்டிகா தென்துருவப்பகுதியில் உள்ளது. இந்த பூமியில் சொந்தம் கொண்டாடும் நாடுகள் தங்கள் கோரிக்கையை 2009-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதிக்குள் முன்வைக்கவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால்...

பெண்ணின் கண்ணில் 20 செ.மீ., நீள புழு

கோழிக்கோடு: பெண்ணின் கண்ணுக்குள் சுருண்டு கிடந்த 20 செ.மீ., நீள புழுவை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். கேரள மாநிலம் பாலாடைச் சேர்ந்தவர் ஆயிஷா. 49 வயதான இவருக்கு ஒரு மாதமாக கண்ணில்...

`மிருகம்’ படத்தில் பத்மபிரியா மீண்டும் நடித்தார்

`மிருகம்' படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியாவை டைரக்டர் சாமி கன்னத்தில் அறைந்ததால் பிரச்சினை உருவானது. பின்னர் பத்மபிரியாவிடம் டைரக்டர் சாமி மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மிருகம் படத்தின்...

புத்திசாலியான இளைய மகனின் ரத்தத்தை மூத்த மகனுக்கு செலுத்த முயன்ற கொடூரம் : விபரீத செயலில் ஈடுபட்ட டாக்டர் தம்பதி கைது

புத்திசாலி இளைய மகனின் ரத்தத்தை சராசரி அறிவுள்ள மூத்த மகனுக்கு செலுத்தினால் அவனும் புத்திசாலியாகிவிடுவான் என்ற எண்ணத்தில் செயல்பட்ட டாக்டர் தம்பதியின் குடும்பத்தில் புயல் வீசிவிட்டது. இதில், இளைய மகன் இறந்து விட் டான்....

தெலுங்கு `சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிரஞ்சீவி மகளுக்கு திடீர் திருமணம்: வீட்டை விட்டு வெளியேறி, காதலனை கரம் பிடித்தார்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகள் திடீர் திருமணம் செய்துகொண்டார். அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி, ஆரிய சமாஜத்தில் காதலனை அவர் மணந்துகொண்டார். தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர்...

சட்ட விரோத மதுக்குகை பொலிஸாரினால் முற்றுகை

ஹிரான பகுதியில் சட்டவிரோத மதுக்குகையொன்றை நடத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பாணந்துறைப் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்;துள்ளனர். சாராயம் போன்று தோற்றமளிக்கும் வகையில் நிறம் கலந்த 360 மூன்ஷைன் போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றினர்....

இந்தோனேசியாவில் எரிமலை கக்கும் அபாயம்

இந்தோனேசியாவில் எரிமலை ஒன்று கக்கும் அபாயம் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் அப்பகுதியிலிருந்து வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ் எரிமலை கக்கப்போவதாக அரச அதிகாரிகளால் எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தும் சில குடியேற்றவாசிகள் அப்பகுதிகளில் திரும்பவும்...

பாகிஸ்தான் பயங்கர குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பெனாசிர் : பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ சென்ற பாதையில் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் எவ்வித காயமுமின்றி பெனாசிர் உயிர்தப்பினார். இந்த பயங்கர சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. அதிபர் முஷாரப்பின் வேண்டுகோள்,...

குவைத்தில் பெண்களைப் பொலிஸில் சேர்க்க முடிவு

குவைத் நாட்டில் பொலிஸ் பணியில் பெண்களை அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை பொலிஸ் பணியில் அமர்த்துவது வளர்ந்த நாடுகளில் சாதாரணமாக நடந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளிலும் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில்...

பாக். திரும்பினார் பெனாசிர்-ஆயிரக்கணக்கானோர் வரவேற்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 8 ஆண்டு வெளிநாட்டு வாசத்திற்குப் பின்னர் இன்று பாகிஸ்தான் திரும்பினார். கராச்சி விமான நிலையத்தில் பெரும் திரளானோர் கூடி அவரை வரவேற்றனர். விமானத்திலிருந்து இறங்கிய பெனாசிர் உணர்ச்சிப்...

சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் உயர் விருதைப் பெறுகிறார் தலாய் லாமா

சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதன்கிழமை மாலையே இவ்விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்ததால்...

இந்தியாவில், ஆண்டுக்கு 1.2 லட்சம் பேர் தற்கொலை மனநிலை பாதிப்பு காரணம்

இந்தியாவில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர், தற்கொலை செய்து கொள்கின்றனர். மனநிலை பாதிப்பு தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சகம் இறங்கியுள்ளது. தற்கொலை முயற்சியில் இறங்குவோர்...

டயானாவின் மரண விசாரணையில் திடீர் திருப்பம் பிரிட்டிஷ் முகவர்களின் சதிச்செயலென குற்றச்சாட்டு

மறைந்த வேல்ஸ் இளவரசி டயானா பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பார்வையை மங்கச் செய்யும் மிகப் பிரகாசமான வெளிச்சமொன்று சுரங்கப்பாதையில் தெரிந்ததாக டயானாவின் மரண விசாரணையில் சாட்சியமளித்த நபர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்....

அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருட்டு

கொழும்பு கோட்டை அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்று இனந்தெரியாதவர்களினால் களவாடப்பட்டமை தொடர்பில், கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றே,...

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஓட்டம் : நீண்ட நாள் காதலனை மணந்தார்

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகளான ஸ்ரீஜா தன்னுடைய குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக தனது நீண்ட நாள் காதலரான சிரிஷ் பரத்வாஜை திருமணம் செய்து கொண்டார். தெலுங்கு நடிகரும் பத்ம விபூஷன் விருது பெற்றவருமான...

கந்தரோடைப் பகுதியிலிருந்து பெருந்தொகையான ஆயூதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், வலிகாமம் கந்தரோடைப் பகுதியில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் நேற்று படையினர் மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இப்பகுதியில்...

நிறைவேறிய த்ரிஷா ஆசை

மோசர் பியர் நிறுவனமும் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸும் இணைந்து ராதாமோகனின் 'அபியும் நானும்' படத்தை தயாரி்க்கிறது. இதில் அபி, த்ரிஷா. நான் பிரகாஷ்ராஜ். படத்தில் இவர்களுக்கு மகள், அப்பா உறவு. பிரகாஷ்ராஜுடன் பல படங்களில்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஐஸ்வர்யாராய்!

பாலிவுட்டில் பணத்திற்கு பஞ்சமில்லை. கோடிகளை கொட்டி பிரமாண்டமான சரித்திரப் படங்களை எடுக்கிறார்கள். சரித்திரப் படங்களில் ராணியாகவோ, ராஜாவின் காதலியாகவோ நடிக்க, இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஐஸ்வர்யாராய்! லகான்' படத்தை இயக்கிய அசுதோஷ் கோவரிகர் 'ஜோதா...

ஈரானின் அணுத்திட்டத்திற்கு உதவ ரஷ்ய ஜனாதிபதி உறுதியளிப்பு

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை ஈரானுக்கு மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஈரானின் அணுத்திட்டத்திற்கு தகுதியான ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், ஈரானின் அமைதிக்கான அணு ஆயுதத் திட்டம் விரைவில் அனுமதிக்கப்படுவதுடன்...

முஷாரப் ராணுவ தளபதியாக தொடரலாமா? முழு பெஞ்ச் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்தபடியே மீண்டும் அதிபர் தேர்தல் போட்டியிடுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி தலைமையிலான முழு பெஞ்ச் விசாரிக்கும் என அந்நாட்டு சுப்ரீம்...

யானைகளுக்குப் பேர்போன யால சரணாலயப் பகுதியில் தேடுதல் தொடர்கிறது

யால வன விலங்கு சரணாலயப் பகுதியில், இலங்கை இராணுவ நிலை ஒன்றை தாக்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை, அங்கு அந்த தேசியப் பூங்காவெங்கிலும் தேடும் நடவடிக்கையில், இலங்கை சிறப்புப் படைப்பிரிவினர் உட்பட சுமார் 500...

ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 விடுதலைப் புலிகள் பலி; ராணுவ வீரர்கள் 9 பேர் சுட்டுக் கொலை

இலங்கையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 34 விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 9 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றனர். நேற்று முன்தினம் மாலை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னி...