திருகோணமலையில் விபத்து – 13 பேர் காயம்..!!
Read Time:53 Second
திருகோணமலை – மொரவெவ – பன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 13 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கடற்படையினரின் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அதேநேரம் மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் மாணவி ஒருவரை உந்துருளி ஒன்று மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதையை கடக்க முயற்சித்த வேளையில் குறித்த மாணவி உந்துருளியில் மோதுண்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating