மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவன்: குடலை உருவி ஆற்றில் வீசிய கொடூரம்…!!
மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவன், உடலை ஆற்றில் வீசிவிட்டு தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ரஷ்யாவில் உள்ள Astrakhan பகுதியில் குடியிருந்து வந்த Onipenko மற்றும் Olga தம்பதியினர் தங்களது குழந்தையின் பேரில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் அன்றும் குழந்தையை விட்டுத்தர கேட்டு Onipenko வாக்குவாதத்தில் ஏற்பட்டு பின்னர் அது கொலை செய்யும் அளவுக்கு நீண்டுள்ளது.
18 வயதே ஆன Olga வை கழுத்து துண்டித்து கொலை செய்த Oipenko ஆத்திரம் அடங்காமல் அவளது குடல் உள்ளுட்ட உள்ளுறுப்புகளையும் துண்டித்து அப்புறப்படுத்தியுள்ளான்.
பின்னர் உடல் பகுதியை அங்குள்ள Krivaya Bolda ஆற்றிலும் குடல் உள்ளிட்ட உறுப்புகளை Kazakhstan எல்லையிலும் தனித்தனியே வீசியுள்ளான்.
இதனிடையே ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடலில் காணப்பட்ட பச்சைகுத்திய அடையாளத்தில் இருந்தே அது Olga என தெரிய வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
22 வயதான Onipenko தனது குழந்தையை விட்டுத்தர கேட்டு சண்டையிட்டுருக்கலாம், பின்னர் கொண்டுவந்த கத்தியால் வயிற்றில் குத்தி கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
Astrakhan பகுதியில் உள்ள குழந்தைகள் நலகாப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ள பொலிசார் Onipenko வை கைது செய்துள்ளனர்.
இதனிடையே, தனது மகனால் இதுபோன்ற ஒரு கொடூரமான செயலை செய்ய முடியாது எனவும் இது திட்டமிட்ட சதி எனவும் Onipenko வின் தந்தை தெரிவித்துள்ளார்.
Average Rating