கடத்தல்காரர்கள் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!
பிரான்ஸ் நாட்டில் போதை பொருள் கடத்தல்காரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தவறதுலாக சிக்கிக்கொண்டு 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரான்ஸில் அமைந்துள்ள Marseille நகரில் உள்ள Lauriers என்ற பகுதி போதை பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு மிகவும் பிரபலமான இடம் ஆகும்.
இதே பகுதியில் கடந்த மே மாதம் கடத்தல்காரர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சுமார் 300 பொலிசார் அதிரடியாக நுழைந்து 20 கடத்தல்காரர்களை அதிரடியாக கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் Lauriers பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அருகில் 15 வயதான 2 சிறுவர்களும், 24 வயதான ஒரு வாலிபரும் நின்று இருந்துள்ளனர்.
அப்போது, திடீரென இரண்டு கார்களின் வந்த சிலர் துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாக அவர்களை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், 3 பேரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியாயினர்.
துப்பாக்கி சூடு நடந்த பகுதிக்கு வந்து பொலிசார் விசாரணை செய்தபோது, உயிரிழந்த 24 வயதான நபர் பொலிசாருக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர்களில் ஒருவரின் உறவினர் பொலிசாரை தொடர்புக்கொண்டு பேசியபோது, மர்ம நபர்கள் தன்னை குறிவைத்து கொல்வதற்கு பதிலாக அந்த 3 பேரை கொன்றுவிட்டதாக தகவல் அளித்துள்ளார்.
பொலிசார் அதே பகுதியில் விசாரணையை தொடங்கியபோது, துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் இரண்டு கார்கள் எரிந்து சாம்பலாக கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் பிரதமாரான மேனுவல் வால்ஸ், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்க அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
Average Rating