ஜனவரி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை..!!
Read Time:1 Minute, 0 Second
இலங்கையர்கள் அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகில் வளர்சியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, இலங்கையர்களுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது பாவனையில் உள்ள தேசிய அடையாள அட்டை, இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையாக மாற்றப்பட்டு விநியோக்கிப்படும் என கூறப்படுகின்றது.
Average Rating