கட்டுநாயக்கவில் தரையிறங்காமல் மத்தள விமானநிலையத்துக்கு சென்ற விமானம்…!!
Read Time:1 Minute, 19 Second
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்த விமானமொன்று மத்தள விமானநிலையத்துக்கு அனுப்பப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குவைட்டிலிருந்து வந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமானUL 230 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க இருந்துள்ளது.
எனினும் இன்று காலை நிலவிய அதிகளவிலான பனிமூட்டம் காரணமாக மத்தளவுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
காலை 6.15 மணியளவில் திரையிறங்கவிருந்த விமானம் பின்னர் 7.00 மணியளவில் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதன் போது 253 பயணிகளும் , 14 விமானப் பணியாளர்களும் விமானத்தில் இருந்துள்ளனர்.
பின்னர் 9 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கும் பொருட்டு விமானம் மீண்டும் மத்தளவில் இருந்து புறப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Average Rating