மோசமாக நடந்துகொண்ட குடியேறிகள்: காயமடைந்த பொலிசார்…!!
பிரான்சில் 200 குடியேறிகள் கலாய்ஸில் அமைந்துள்ள இங்கிலாந்து செல்லும் கால்வாய் சுரங்கப்பாதையினை தடுத்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸ்ஸின் கலாய்ஸ் பகுதியிலுள்ள Tunnel சுரங்க நுழைவாயில் வழியாக குடியேறிகள் பிரித்தானியாவிற்கு செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த கலாய்ஸ் பகுதியில் தங்கியுள்ள 200 குடியேறிகள் உள்ளூர் நேரப்படி காலை 11.00 மணியளவில் இந்த சுரங்கப்பாதையினை தடுத்து பிரச்சனையில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 300 கண்ணீர் குண்டுகளை வீசி, அவர்களை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர், இந்த சம்பவத்தால் 16 பொலிசாருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி கூறியதாவது, காலிஸ் முகாம்களில் 6,000 பேர் வசித்து வருகின்றனர், நாளுக்கு நாள் நெருக்கடிகளை சந்தித்து வரும் எங்களுக்கு, இதற்கான தீர்வு மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும்.
குடியேறிகள் இதுபோன்ற பிரச்சனைகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும், ஆனால் இந்தமுறை மிகவும் மோசமாக நடந்துகொண்டனர் எனக்கூறியுள்ளார்.
Average Rating