சவுதி அரேபியா: போலீஸ் ரோந்து வாகனத்தின்மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு – இரு இந்தியர்கள் படுகாயம்…!!
Read Time:1 Minute, 25 Second
சவுதி அரேபியா நாட்டில் தற்போது மெல்ல, மெல்ல வன்முறை தலைதூக்கிவரும் கதிப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ரோந்து சென்ற வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இந்தியர்கள் படுகாயமடைந்தனர்.
ஷியா பிரிவு மக்கள் அதிகமாக வாழ்ந்துவரும் அல்குவாலிதியே மாவட்டத்தில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் ரோந்து சென்ற வாகனத்தின்மீது, ஒரு வயல்வெளியில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு, அதிரடியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த இரு இந்தியர்கள் உள்பட மூன்று பேர் உடல்களில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் அபாயகட்டத்தை கடந்து சிகிச்சை பெற்றுவருவதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating