அமெரிக்காவில் விளையாட்டு மைதானத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு…!!
Read Time:1 Minute, 20 Second
அமெரிக்காவின் நியூ ஓர்லியான்ஸ் நகரில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள பன்னிஃப்ரெண்ட் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதைக் காண்பதற்காக சுமார் 500 பேர் மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர்கள் சிலர் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் 16 பேர் படு காயமடைந்தனர், சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள யுனிவர்சிட்டு மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் துப்பாக்கிச்சூட்டில் 2 மர்மநபர்கள் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Average Rating