துருக்கியில் அகதிகள் படகுகள் கடலில் மூழ்கியது: 6 குழந்தைகள் பலி…!!
உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்யும் அவர்கள் கிரீஸ் வழியாக துருக்கி வந்து அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு வரும் அகதிகள், படகுகள் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகின்றன.
இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 55 அகதிகளுடன் ஒரு படகு கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவின் அய்வாசிக் அருகே இருந்து புறப்பட்டது. துருக்கியின் ஏஜியான் என்ற இடத்தில் வந்த போது அதிக காற்று மற்றும் அலையின் வேகம் காரணமாக கடலில் மூழ்கியது.
அதில் அப்படகில் பயணம் செய்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 4 குழந்தைகள் பலியாகினர். கிரீஸ் நாட்டின் கோஸ் தீவில் இருந்து புறப்பட்ட மற்றொரு படகு மூழ்கியதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பலத்த மழை மற்றும் புயல் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. மீட்பு பணியில் துருக்கி கடற்பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating