ஆயுதங்கள் தளவாடங்களை கடத்த கேரள கடற்கரையை பயன்படுத்தும் விடுதலைப்புலிகள்
ஆயுதங்கள் தளவாடங்கள் மற்றும் மருந்து பொருட்களை கடத்துவதற்காக கேரள கடற்கரை பகுதியை மெல்ல மெல்ல விடுதலைப்புலிகள் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். ஆர்.டி.எக்ஸ் போன்ற வெடிமருந்துகளை மலபார் பகுதியிலிருந்து புலிகள் கடத்துவதாக தெரிகிறது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள படைக்குமிடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. புலிகளின் முகாம்கள் சிங்கள படை தாக்கி அழித்து வருகிறது. அதே போல இலங்கை விமான தளங்கள் மற்றும் முக்கிய தளங்கள் மீது விடுதலைப்புலிகளும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் . இப்படி தாக்குதல் தொடர்ந்து நடப்பதால் இனி அமைதி பேச்சுக்கு வழியே இல்லை என்பது புலனாகிவிட்டது. இலங்கையில் சண்டை நடப்பதால் அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதை தடுப்பதற்காக இந்திய கடற்படையும், கடலோரகாவல் படையும் தொடர்ந்து விழிப்புணர்வோடு இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டதால் புலிகளின் நடமாட்டம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை பகுதி வழியாக இனி விடுதலைப்புலிகள் இனி ஊடுருவல் செய்ய முடியாது. இதையடுத்து விடுதலைப்புலிகள் தங்கள் நடவடிக்கைளை கேரள கடற்கரைக்கு மாற்றி விட்டதாக கடற்கரை உயர் அதிகாரி ஓருவர் தெரிவித்தார். தமிழ்நாடு கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே புலிகள் ஊடுருவல் செய்வது சாத்தியமில்லை.
எனவே தான் ஆயுதங்களையும், தளவாடங்களையும், மருந்துகளையும் கடத்துவதற்காக விடுதலைப்புலிகள் மெல்ல மெல்ல கேரள் க டற்கரையை பயன்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதர தீவிரவாத அமைப்புகல் மலபார் பகுதியை பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றும் அந்த அதிகாரி நிருபர்களிடம் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைளை சமீப காலமாக கேரள கடற்பகுதியில் செய்வதையும் அவர் சுட்டிக்காட்டினார். கொச்சி திருவனந்தபுரம் இடையே ஓரு மீன்பிடி படகை அவர்கள் பறிமுதல் செய்ததை அதிகாரி சுட்டிக்காட்டினார்.
புலிகளின் ஊடுருவலுக்கு இது ஆரம்பம் என்றும் கூறினார். மற்றொரு அமைப்பு கொங்கன் கடற்கரை வழியாக ஆர்.டி.எக்ஸ். மருந்து கடத்தியதாகவும் அவர் கூறினார். இப்போது இந்த அமைப்பு மலபார் பகுதியை பயன்படுத்துவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...