இலங்கை வருகிறார் சுஷ்மா…!!
Read Time:1 Minute, 20 Second
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்து – இலங்கை ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள விடயத்தை, சுஷ்மா சுவராஜ், இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து ஏற்கனவே கூறி இருந்தார்.
இதேவேளை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வால் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்தார்.
எனினும் அவர் முற்றிலும் தனிப்பட்ட வகையிலேயே இலங்கை வந்திருப்பதாகவும், அவர் ராஜதந்திரி செயற்பாடுகள் எதனிலும் ஈடுபட மாட்டார் என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
Average Rating