இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கி விபத்து: 3 பேர் பலி, 80 பேரை காணவில்லை…!!
இந்தோனேசியாவில் 110 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் சுலவேசி மாகாணத்தின் கொலாகோ துறைமுகத்தில் இருந்து ஷிவா தீவுக்கு பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 110 பேர் பயணம் செய்தனர். இவர்களுடன் 12 ஊழியர்களும் சென்றனர். நடு கடலில் சென்றுக்கொண்டிருந்த போது கப்பலை 10 அடி உயர அலைகள் தாக்கியது. இதனால் கப்பல் மூழ்கியது.
இந்த விபத்து குறித்து கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மீட்பு பணியில் பெரிய கப்பல்கள், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கடைசியாக கிடைத்த தகவல்படி இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 80 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
விபத்துகுள்ளான கப்பலில் சென்றவர்களின் உறவினர்கள் ஷிவா துறைமுகத்தில் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் கண்ணீருடன் காத்துள்ளனர்.
Average Rating