ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை 100 ரூபாயில் இலங்கை பறக்கலாம்
Read Time:1 Minute, 11 Second
இந்தியாவுக்கு வாரத்தில் 100 விமான சேவைகளை இயக்கும் முதல் வெளிநாட்டு விமான நிறுவனம் என்ற பெருமையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு 100வது விமான சேவையை இயக்கும் வகையில் கொழும்பு & திருச்சி இடையே விமான போக்குவரத்தை நவம்பர் 27ம் தேதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடங்கியது. அதை முன்னிட்டு தனது பயணிகளுக்கு சிறப்புச் சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன வெப்சைட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் முதல் 1,100 பேருக்கு கட்டணம் ரூ.100 மட்டுமே. என்ற வெப்சைட்டில் பதிவு செய்து இந்தியாவின் 11 முக்கிய நகரங்களில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு விமான டிக்கெட்டை ரூ.100க்கு பெறலாம்.