சண்டிகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு: 6 பேர் பலி…!!
Read Time:1 Minute, 13 Second
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகே உள்ள கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் பல கட்டிடத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர், 12 தொழிலாளர்களை மீட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating