கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அதிமுக எம்.எல்.ஏ

Read Time:1 Minute, 26 Second

பாபநாசம் அருகே பிரசவ வலியால் துடிதுடித்த பெண்ணை அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு மருத்துவமனையில் சேர்த்தார். நெல்லை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த செல்வராஜின் மனைவி ராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். உறவினர் வீட்டுக்கு தனியாக சென்றுள்ளார். அப்போது ராணி திடீரென பிரசவ வலியால் துடிதுடித்து மயங்கி ரோட்டிலே விழுந்தார். ரோட்டில் சென்ற பெண்கள் சிலர் சீலையை மறைப்பாக பிடித்துக் கொள்ள அங்கேயே அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந் நிலையில் அவ்வழியே வந்த துரைக்கண்ணு எம்எல்ஏ அந்த பெண்ணிண் நிலைமையை பார்த்து உடனே மருத்துவமனைக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்தார். அதன் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மருத்துவமனைக்கு சென்ற எம்எல்ஏ துரைக்கண்ணு அப்பெண்ணிடம் உடல் நலம் விசாரித்த பின்னர் பிறந்த குழந்தைக்கு சந்தியா என்று பெயர் வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மலேசியாவில் இறந்த பரமக்குடி இளைஞர் சாவில் புது திருப்பம்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…