இணைய தளத்தில் தோழிகள் கைவரிசை: என்னை செக்சுக்கு அழைத்து தொந்தரவு செய்கிறார்கள்; கமிஷனரிடம் அழகு நிலைய பெண் புகார்
சென்னை கொடுங்கைïர் வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் ஜெனிவா. இவர் வக்கீல் தினேசு டன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் நாஞ்சில்குமரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- நான் அழகுக்கலை படிப்பு படித்துள்ளேன். நுங்கம் பாக்கத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்தேன். வேலைக்கு சேரும் போது எனது முழு பயோ டேட்டாவையும் கொடுத்திருந் தேன். என்னுடன் படித்த தோழி களும் அங்கு வேலை செய் தனர். அவர்கள் படிப்புக்கு தகுந்த வேலை பார்த்தனர். எனக்கு மட்டும் படிப்புக்கு தகுந்த வேலை தராமல் சுத்தம் செய்யும் வேலை கொடுத் தனர். நாங்கள் பழைய தோழி களுடன் பேசுவதற்காக ஆர்குட் இணைய தளத் தில் ஒரு பகுதி உருவாக்கி இருந்தோம். அதில் எனது தந்தையுடன் நான் இருக்கும் புகைப்படத்தையும் வெளி யிட்டிருந்தேன். இந்த நிலையில் எனக்கு தகுந்த பணி கொடுக்காததால் வேலையில் இருந்து நின்று விட்டேன். இது எனது தோழி களுக்கு ஆத்திரத்தை ஏற் படுத்தியது. நான் பழைய தோழிகளுடன் பேச உருவாக்கி இருந்த இணைய தளத்தில் எனது படத்தின் அருகே என் செல் போன் நம்பரை கொடுத்து என்னுடன் உல்லாசமாக இருக்கலாம் என்பது போல மாற்றி அமைத்து விட்டனர். மேலும் எனது தாயாருடனும் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தகவல் பதிவு செய்து விட்டனர். இதைப் பார்த்தவர்கள் எங்களுக்கு போன் செய்து செக்சுக்கு அழைக்கிறார்கள். தினமும் 100-க்கும் மேற்பட்ட போன் கால்கள் வருகின் றன. இதனால் எங்களால் நிம்மதியாக இருக்க முடிய வில்லை. நான் வேலையை விட்டு நின்றதால் ஏற்பட்ட ஆத்திரத் தில் தோழிகள் இது போல செய்துள்ளனர். எனவே அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.