செல்போன் வெடித்து தம்பதி பலி ; மகன் கவலைக்கிடம் – தமிழகத்தில் சம்பவம்…!!
மெத்தையில் செல்போனை வைத்து சார்ஜ் செய்ததால் செல்போன் வெடித்து உறங்கி கொண்டிருந்த தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் வியாசர்பாடி பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் தினேஷ் அதிகாலை 5 மணிக்கு எழும்புவதற்காக செல்போனில் அலாரம் தயார் செய்து வைத்திருந்தார்.
அப்படியே செல்போனை மெத்தையில் வைத்து சார்ஜ் போட்டபடி குடும்பத்தினர் உறங்கச் சென்றுள்ளனர்.
பின்னர் அதிகாலை 5 மணி அளவில் செல்போனில் அலாரம் அடித்தபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.
அப்போது செல்போனும் தீப்பிடித்து எரிந்து செல்போன் வைக்கப்பட்டிருந்த மெத்தையும் தீப்பிடித்துள்ளது.
பின்னர் தீ கட்டிலுக்கும் பரவி வீடு முழுக்க பற்றியுள்ளது.
இந்நிலையில் உறங்கி கொண்டிருந்த தினேஷின் தாய், தந்தை ஆகிய 3 பேரும் அலறியடித்துக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளனர்.
எனினும் அவர்களால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை.
மூவரின் உடலிலும் தீ பற்றியுள்ள நிலையில் வீட்டுக்குள்ளேயே தீயில் சிக்கியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வியாசர்பாடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதனையடுத்து 3 பேரும் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேந்திரனும், நேற்று அதிகாலையில் ராணியும் அடுத்தடுத்து உயிர்ழந்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating