கோடி ரூபாய் வெளிநாட்டு பணத்துடன் ஆண், பெண் கைது…!!
Read Time:1 Minute, 5 Second
ஒரு தொகை சட்டவிரோத வெளிநாட்டு பணத்துடன் தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி செல்ல முயன்ற பெண் மற்றும் ஆண் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1 கோடி 25 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு பணம் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேரந்த 45 வயது பெண் மற்றும் 27 வயது ஆண் ஆகிய இருவரே வைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவரகளது பயணப் பொதியில் இருந்து 80,000 அமெரிக்க டொலர் மற்றும் சுவிஸ் பிரேங் 6,000 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலும் கூறினர்.
Average Rating