65 வயதாகியும் ஆசை விடவில்லை: பக்கத்து வீட்டு கிழவர் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்; வீட்டு பணிப்பெண் கண்ணீர் புகார்
சென்னை கோபாலபுரம் ஜெய்ப்பூர் காலனி பத்மாவதி சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் எஸ்தர் ஜெயராணி (வயது18). வீட்டுப் பணிப்பெண். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- என் சொந்த ஊர் திருச்சி. ஜெய்ப்பூர் காலனியில் உள்ள ஸ்ரீகலா என்பவர் வீட்டில் பணிப் பெண்ணாக இருக்கிறேன். தினமும் இரவு வேலை முடிந்ததும் அங்குள்ள முதல் மாடியில் தங்குவேன். அதே வீட்டின் 2-வது மாடியில் 65 வயது முதியவர் ஒருவர் தன் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த 5 மாதமாக அவர் எனக்கு “செக்ஸ்” மிரட்டலும், தொல்லையும் கொடுத்து வருகிறார். நான் அதிகாலையில் கோலம் போடும் போது அறுவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்கிறார். என் வீட்டுக்கு வந்து விடு, என் மனைவி மாதிரி உன்னையும் வைத்துக் கொள்கிறேன் என்று அடிக்கடி என்னிடம் முறை தவறி பேசுகிறார். என்னை பின்பக்கமாக வந்து திடீரென கட்டிப் பிடித்து விட்டார். அவரது செக்ஸ் தொல்லையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு எஸ்தர் ஜெயராணி தன் மனுவில் கூறி உள்ளார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.