மிஹிந்தலை புனித பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை…!!
Read Time:1 Minute, 9 Second
மிஹிந்தலை புனித பிரதேச காட்டுப் பகுதியில் நபரொருவர் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொல்பொருளியல் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மரமொன்றில் கயிறொன்றைப் போட்டு தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள ஆண் ஒருவரின் சடலத்தைக் கண்டுள்ளனர்.
சடலத்தின் அருகே தற்கொலை செய்த நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆடைப் பொதியொன்றும் இருந்துள்ளது. எனினும் இவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. சுமார் 65 வயது மதிக்கத்தக்கவர் என்றும் கூறப்படுகிறது.
Average Rating