காதலிக்க மறுத்த மாணவி உயிரோடு எரித்துக் கொலை…!!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் சாத்தப்பரு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி வெங்கடேஸ்வரம்மா. இருவரும் கூலி தொழில் செய்கிறார்கள்.
இவர்களது மகள் இந்துமதி பிளஸ்–2 படித்து வருகிறார். இதே பகுதியில் கூலி வேலை செய்யும் சின்ன விக்கி என்ற வாலிபர் இந்துமதி மீது காதல் கொண்டார்.
தனது காதலை இந்துமதியிடம் தெரிவித்த போது அவள் ஏற்கமறுத்து விட்டார். தினமும் அவர் பள்ளிக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்று தனது காதலை ஏற்கும்படி வற்புறுத்தி வந்தார்.
அதோடு அந்த வாலிபரின் அண்ணன் பெரிய விக்கியும் இந்துமதியை சந்தித்து தனது தம்பியை காதலிக்கும்படி மிரட்டினார். இதுகுறித்து இந்துமதி தனது பெற்றோரிடம் புகார் செய்தார்.
இதனால் இந்துமதி பள்ளிக்கு செல்வதை அவர்களது பெற்றோர் நிறுத்தி விட்டனர். அதோடு போலீசிலும் புகார் செய்தனர்.
சம்பவத்தன்று இந்துமதியின் பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இந்துமதி தனியாக இருந்தாள்.
நள்ளிரவில் சின்ன விக்கி தனது அண்ணன் பெரிய விக்கியுடன் இந்துமதி வீட்டுக்கு வந்தார். தனியாக இருந்த இந்துமதியிடம் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார்.
அவர் மறுக்கவே ஆத்திரத்தில் அவள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பி விட்டனர்.
உடல் முழுவதும் தீ பற்றி எரிய இந்துமதி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஏலூர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இந்துமதி பரிதாபமாக இறந்தார்.
இந்துமதி தனது மரண வாக்குமூலத்தில், ‘‘சின்ன விக்கியும் அவரது அண்ணனும் தீ வைத்ததாக தெரிவித்து இருந்தார்.’’
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அண்ணன்–தம்பியை தேடி வருகிறார்கள்.
Average Rating