கொடுங்கையூர் வியாபாரி கொலையில் கால்சென்டர் ஊழியர் கைது..!!
Read Time:44 Second
கொடுங்கையூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சேகர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
நேற்று மாலை அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடுங்கையூர் ரேகாநகரை சேர்ந்த கால்சென்டர் ஊழியர் சதீஷ் ஓட்டிவந்த பைக் மீது மோதினார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த சதீஷ் கட்டையால் சேகரை தாக்கினார். இதில் அவர் இறந்து போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
Average Rating