முதலை தாக்கி இளைஞன் பலி..!!
Read Time:1 Minute, 9 Second
எப்பாவல – பொகுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக எப்பாவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞன் கலா ஓயாவில் நீராடச் சென்ற போது முதலை தாக்குதலுக்கு இலக்காகி காணாமல் போயிருந்தான்.
தேடுதல் நடவடிக்கைகளின் பின், பொகுனுகம பகுதியில் கைகள் இரண்டும் முதலையால் கடித்து குதறப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய எச்.எம்.சுதர்சன என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating