துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமியை கற்பழித்தவர்கள் தலைமறைவு..!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று, துப்பாக்கி முனையில் மிரட்டி, கற்பழித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தார் ஒரு விசேஷத்துக்காக வெளியூர் சென்றுவிட்ட நிலையில் அந்த சிறுமி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த இரு வாலிபர்கள், சிறுமியை அங்கிருந்து அருகாமையில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்கு தூக்கிச் சென்றனர்.
பின்னர், துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை இருவரும் மாறி, மாறி கற்பழித்தனர். இவ்விவகாரத்தை வெளியே யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்று கூறி, மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றனர்.
மறுநாள் காலை சிறுமியை தேடிய பெற்றோர், அந்த பாழடைந்த வீட்டில் அவர் அலங்கோலமான நிலையில் கிடப்பதை கண்டனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating