திருவள்ளூர் அருகே பெண் தற்கொலை..!!
Read Time:1 Minute, 21 Second
திருவள்ளூரை அடுத்த சேலை காலனி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தி (வயது 52). கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாந்தி வயிற்றுவலியால் அவதியுற்று வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வயிற்றுவலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating