பொலிஸாரைத் தாக்கிய இருவர் கைது..!!
Read Time:1 Minute, 16 Second
அனுராதபுரம் பழைய பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து இரு பொலிஸாரைத் தாக்கியதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதையில் அறுவர் இணைந்து ஒருவரைத் தாக்கிக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அப் பகுதிக்கு சென்ற இரு பொலிஸ் கான்ஸ்டபில்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாக்கப்பட்ட ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ்சில் கப்பம் கோரிய சம்பவமே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating