தாயகம் திரும்பினார் ஜனாதிபதி…!!

Read Time:1 Minute, 37 Second

16890541801பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாயகம் திரும்பியுள்ளார்.

பெங்கலூரில் இருந்து நேற்று இரவு 10.40 அளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று இந்தியாவின் சாஞ்சி பௌத்த புனிதத் தளத்திற்கும் ஜனாதிபதி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் பாரம்பரியம் மிக்க உஜ்ஜைனி நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிம்ஹஸ்தா கும்பமேளா நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

இதையொட்டி ‘சரியான வழியில் வாழ்வோம்’ என்ற 3 நாள் மாநாடும் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று 51 அம்ச திட்டங்கள் அடங்கிய சிம்ஹஸ்தா பிரகடனத்தை பிரதமர் மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர் என, இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த ஒட்டகத்திற்குள் இன்னொரு மிருகம் மறைந்திருக்குது… கண்டுபிடிங்க பார்ப்போம்…!!
Next post “புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -2)