வியாசர்பாடியில் டெய்லர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற மனைவியும் கருகினார்…!!
வியாசர்பாடி, சர்மாநகர் எஸ்.ஏ.காலனி 8–வது தெருவில் வசித்து வந்தவர் பத்மநாபன் (வயது 38) டெய்லர். அதே பகுதியில் டெய்லர் கடை வைத்து இருந்தார். தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பத்மநாபன் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இன்னும் ஒருவாரத்தில் அந்த வீட்டுக்கு செல்ல இருந்ததாக தெரிகிறது.
நேற்று மாலை கணவன்– மனைவி இருவரும் கடையில் புதிய துணி எடுத்து வந்தனர். வீட்டுக்கு வந்ததும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பத்மநாபன் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அதிர்ச்சி அடைந்த சசிகலா கணவரை மீட்க முயன்றார். இருவரும் தீயில் கருகினர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பத்தினர் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி பத்மநாபன் பலியானார். சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து எம்.கே.பி. நகர் இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating