மலசலகூடத்தில் சீ.சீ.டீ.வி கமரா பொருத்திய வைத்தியர்..!!
Read Time:1 Minute, 0 Second
அனுராதபுர வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவின் பெண்கள் மலசலகூடத்தில் சீ.சீ.டீ.வி கமராவை பொருத்திய வைத்தியருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் 27 வயதான குறித்த வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் பொருட்டு நீதிபதியின் அறிவுரை பெறப்படுவதற்காக அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிபதி ஹர்சன கெகுனவெலவின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வைத்தியருக்கு எதிராக வைத்தியசாலைக்குள் தற்சமயம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating