வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படாமையினால் முதியவர் உயிரிழப்பு..!!
வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படாமையினால் முதியவர் உயிரிழப்பு! திடீர் மரணவிசாரணை அதிகாரி
வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட ஒருவர் அங்கு வைத்தியர் கடமையில் இல்லாமையினால் பொது வைத்தியாசலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக வவுனியா திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
165, கற்குளம் 4, சிதம்பரபுரம் எனும் முகவரியில் வசித்த 64 வயதுடைய செல்லத்துரை சந்திரலிங்கம் என்பவர் இரவு 12 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு சிதம்பரபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அங்கு வைத்தியர் இல்லாத காரணத்தினால் வெள்ளையுடையுடன் அங்கிருந்தவர்கள் சிகிச்சை அளித்து கையொப்பம் இடப்படாத படிவமொன்றினூடாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளியை அனுப்பியுள்ளதாகவும் அங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நோயாளி மரணமடைந்துள்ளதாகவும் மரணமடைந்தவரின் மகனான ஜோன்சன் டைம் மரண விசாரணையின் போது சாட்சியமளித்துள்ளார்.
இவ்வாறான சம்பவம் முன்னரும் இடம்பெற்றதாக தெரிவித்திருந்த திடீர் மரண விசாரணை அதிகாரி இம் மரணம் வைத்தியர் வைத்தியசாலையில் கடமையில் இல்லாமையினாலேயே இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.
Average Rating