13 வயது பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு..!!
Read Time:54 Second
கல்கிரியாகம – தம்புகஹல்மில்லவெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவனது வீட்டின் ஜன்னலிலேயே மாணவனது சடலம் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கல்கிரியாகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த மரணம் தற்கொலையா? அல்லது கொலையா?என அறியும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating