ஆயுத கிடங்கு தீப்பிடித்து எரிந்தது
இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள கலுத்துறையில் உள்ள ராணுவ கிடங்கு நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த துப்பாக்கிகள், வெடிபொருட்கள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
இங்கு வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை, ராணுவத்தினர் பயிற்சி பெறும் போது பயன்படுத்த சேமித்து வைத்து இருந்தனர். தீ அணைக்கும் படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இந்த சம்பவத்துக்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
போலீஸ் வாகனம் எரிந்தது
கொழும்பு அருகே உள்ள கதுக்குருண்டா என்ற இடத்தில் போலீஸ் வாகனம் ஒன்று எரிந்தது. இது தற்செயலாக நடந்த விபத்து என்று அதிகாரி ஒருவர் கூறினார். இதில் ஏற்பட்ட சேதம் பற்றி அறிவிக்கப்படவில்லை.