சிவகாசியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை…!!
Read Time:1 Minute, 24 Second
சிவகாசி துரைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் சத்தியப்பிரியா (வயது15).
தாயுடன் பட்டாசு கம்பெனி வேலைக்கு சென்று வந்த இவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் தீ வைத்துக்கொண்டார்.
இதில் உடல் கருகிய சத்தியப்பிரியாவின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்கள், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சத்தியப்பிரியா பரிதாபமாக இறந்தார்.
அவர் சாவதற்கு முன்பு கொடுத்த வாக்குமூலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா (25) என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தீக்குளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காட்டுராஜாவை கைது செய்தனர்.
Average Rating