பாகிஸ்தானில் மழைக்கு 24 பேர் பலி
Read Time:43 Second
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்தது. இதில் 14 சிறுவர்கள் உள்பட 24 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். அறுந்த மின்சாரக் கம்பிகளை மிதித்ததால் மின்சாரம் தாக்கியும் தண்ணீரில் மூழ்கியும் அவர்கள் பலியானார்கள்.கராச்சி நகரில் கடந்த 40 மணி நேரமாக மின்சப்ளை இல்லை. மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வீடுகளை சூழ்ந்து கொண்டது. இதனால் தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை.