கொலைக்கு மரண தண்டனை – போதைப் பொருள் பாவனைக்கு ஆயுள் தண்டனை…!!
கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிக்கு அநுராதபுர மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கல்னேவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது,
2013 ஆம் டிசம்பர் 12 ஆம் திகதி கல்னேவ பிரதேசத்தில் ஒருவரை பொல்லால் அடித்து கொலை செய்தமைக்கு எதிராக சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குறித்த குற்றவாளிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதன் படி அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொல, குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் கடூழிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
3.83 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த புப்போகம கட்டுகெலியாவை பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating