மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி..!!
அம்பாறை தமண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்ப்பத்தான்சேனை பிரதான வீதியில் இன்று காலை 08.00 மணியளவில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் வந்த கன ரக லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளை செலுத்தியவரே மரணமடைந்துள்ளதாகவும், பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் வர்ப்பத்தான்சேனை 01ம் பிரிவைச் சேர்ந்த உதுமாலெப்பை ஸாதிக் (42) என்ற இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவ் விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating