பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் உயிருடன் எரித்து கொலை…!!
பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் சிட்ரா (23). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாரிஸ் அலி என்பவருக்கும் திருமண நிச்சயதார்ததம் நடந்தது. அதன் பின்னர் அவர் சவுதி அரேபியாவுக்கு திடீரென புறப்பட்டு சென்று விட்டார்.
எனவே அவருடன் நடந்த நிச்சயதார்த்தத்தை முறித்து விட்டு அவரது தம்பி வாகஸ் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் சிட்ரா கர்ப்பிணியாக இருந்தார். இதற்கிடையே ஒருவருடம் கழித்து சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய வாரிஸ் அலிக்கு இந்த விஷயம் தெரிய வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டின் அறையில் தனியாக இருந்த சிட்ரா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். கதவை மூடி தீயிட்டு ஓடி விட்டார். இதனால் தீயில் கருகி சிட்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாரிஸ் அலியை கைது செய்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating